Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 31 மே, 2013

சங்கீத துறையிலும் , விஞ்ஞான துறையிலும் , சாதனை படைக்க வைக்கும் நியூமராலஜி அதிஷ்ட பெயர் எண் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

1 கருத்துகள்

                                                              ஓம் சிவ சக்தி 


பெயரின் கூட்டு எண் 66 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் உண்டாகும். 

மிகவும்  அற்புதமானது இந்த எண் . சகல சுகமும் ஒருங்கே தரக்கூடியது ஏராளமான பொருள் வரவை தர கூடியது இந்த எண் . 

ஆச்சரியபடும்படியான அற்புதமான நாவன்மையையும் , பேச்சுத்திறன் , சங்கீதம் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைப்பது போன்றவைகளை இந்த 66 ம் ஏற்படுத்தி கொடுக்கும். 

அரசாங்கம் அரசியல் துறைகளின் கௌரவ விருது , சுக சந்தோஷங்கள்  ஆடம்பர பொருட்களால் லாபத்தை அனுபவித்தல் போன்றவைகளை இந்த எண் ஏற்படுத்தி கொடுக்கும். 

முன் வயதிலே முழுமையான இன்பங்களை இந்த எண் ஏற்படுத்தி கொடுத்து பின் இன்பங்களை அனுபவித்த இவர்களுக்கு பிற காலத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் உண்டாகும். 


சுக்கிரன் + சுக்கிரன் இணைந்து குருவின் ஆதிக்க எண்ணை தருவதால் மாலவ்யா என்ற ஒரு வகையான யோகம் ஏற்பட்டு  கலை பித்தர்கலாகவும் வாகனம் , நவரத்ன சேர்க்கை பணம் சம்பந்தப்பட்ட துறைகள் , பாங்க் இன்சூரன்ஸ் , கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றிலும் இவர்கள் பிரசித்தி அடைவார்கள் 

ஆண் பெண்களுக்கிடையே அன்பும் பரிவும் பரிவர்த்தனை ஆகும். 
இந்த எண்ணுக்கு குரு பகவானும் சுக்கிர பகவானின் ஆசியும் உண்டு. 

பிறந்த  தேதி 3 12 21 30 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் பிரமிடு எண் , 3 க வருபவர்கள் இந்த 66 ம் எண் பிரமிடு எண்ணாக  வருமாறு பெயரை அமைத்து கொண்டால் ராஜ யோக பலன்களை அனுபவிக்கலாம் . 

6 15 24 , போன்ற தேதியில் பிறந்தவர்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 6 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயர் அமைப்பு இருந்தால் தீமையான பலன்கள் உண்டாகும். . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

சந்தோஷமான திருமண வாழ்வை தரும் நியூமரலாஜி பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

                                                         ஓம் சிவ சக்தி 

பெயரின் கூட்டு எண்  65 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்ல படுகிறது .

நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்க்கையும் அமையும் . செல்வாக்குள்ளவர்களின் ஒத்தாசையும் பூரண ஆதரவும் உண்டாகும் சந்தோஷமான திருமண வாழ்க்கையும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த 65 ம் எண்ணைப்பற்றி எகிப்திய படங்களில் அரசனின் நாணயம் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது சத்ரு ஜெயம் , தாம்பூலம் என மந்திர நூல்களில் இந்த எண் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது 

தெய்வாம்சம் பொருந்திய இந்த எண் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலன்களை  குறிக்கிறது . மேலும் இந்த எண்ணுக்கு செல்வந்தர்களது ஆதரவும் நட்பும் கிடைப்பது ஒரு சிறப்பான அமசமாகும் . நல்ல வாழ்க்கை துணை மூலம் யோகமான வாழ்க்கை இந்த எண்ணிற்க்கு உண்டு. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த எண் யோகமான பலன்களை கொடுக்கும் . 

வெற்றி வாகை சூடி விருது பெறுவதை இந்த எண குறிக்கிறது. அடக்கம் மரியாதை தெய்வீகம் பக்தி பங்கு மார்க்கெட் சிட்பண்ட்ஸ் , போன்ற லாபம் தரக்கூடிய வலிமையான  தொழில்கள் இந்த எண்ணுக்கு அமையும். 


சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவியினரின்   இந்த 65 ம் எண் காரர்கள் எதிர்பாராத ஆபத்தில் மாட்டி கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பிக்க முடியும் . விபத்தினால் உண்டாகும் ரணம் சில காய தழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு. 

பெயர் எண் இந்த 65 ம் எண்ணாக அமைந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண பிறந்த தேதிக்கு ஏற்றார் போல் சிறப்பான கூட்டு எண்ணில் அமைந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் குன்றாமல் நிலைத்து நிற்கும் 

9 18 27 ம் தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 2 ம்  எண்ணாக வருபவர்கள் இந்த 65 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் தீமையான பலன்கள் உண்டாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

புதன், 29 மே, 2013

குரு சண்டாள யோகத்தால் நன்மைகள் உண்டா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

                                                    ஓம்   சிவ சக்தி 


நவ கிரகங்களில் குரு பகவானும் , அந்த குருபகவானுடன் ராகுவும் இணைந்திருந்தால் அது குரு சண்டாள யோகம் எனப்படும் . இந்த குரு சண்டாள யோகம் பெற்ற ஜாதகருக்கு அவ்வளவாக நன்மையான பலன்கள் என்று சொல்வதற்கு இல்லை. குறிப்பாக குருவும் ராகுவும் எட்டரை பாகைக்குள் இணைந்திருப்பது இந்த குரு சண்டாள யோகத்தில் அதிகபடியான தீமைகள் விளையும் என்று சொல்லலாம். குரு தசை குரு புக்தியில் பல இன்னல்களும் ஏற்படும். செல்வநிலையில் என்றும் பற்றாக்குறை வாழ்க்கையாகவே அமையும் .எந்த பாவத்தில் இந்த கிரக நிலை இருக்கிறதோ அந்த பாவக பலன் பாதிக்க படும் . ஐந்தாம் பாவகத்தில் இருந்தால் புத்திர தோஷம் தரும் . இரண்டாம் பாவத்தில் இருந்தால் செல்வநிலையில் என்றும் பற்றாக்குறையை தரும். நான்காம் பாவத்தில் இருந்தால் தாய்க்கு தோஷத்தை தரும் . வீட்டை விட்டு பிரிந்து வாழும் சூழ் நிலை ஏற்படும். 

ஆறாம் பாவத்தில் இருந்தால் தாய்மாமன் உறவு நிலை பாதிக்கப்படும் , மூன்றாம் பதினொன்றாம் பாவத்தில் இருந்தால்  சகோதர வழியில் தோஷத்தை உண்டாக்கும் .ஏழாம் பாவத்தில் இருந்தால் மனைவி , மற்றும் மனைவி வழி உறவு வகை பாதிக்கபடும். இவ்வாறாக ராசிகட்டதில் உள்ள பன்னிரண்டு கட்டங்களும் ஒவ்வொரு உறவு வகையையும் குறிக்கிறது . இந்த குரு சண்டாள யோகம் எந்த கட்டத்தில் இருக்கிறதோ அந்த கட்டம் எந்த உறவு வகையை குறிக்கிறதோ அந்த உறவு வகை பாதிக்கப்படும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>

செவ்வாய், 28 மே, 2013

குருபெயர்ச்சி -2013- நன்மைகள் யாருக்கு? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்

                                                           ஓம் சிவ சக்தி 

நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, இன்று இரவு 9.03க்கு ரிஷபராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஓராண்டு காலம் ஒரு ராசியில் தங்கும் இவர், 2014 ஜுன்12 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். "குரு பார்க்க கோடி நன்மை என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும். குரு இருக்கும் இடத்தை விட, அவரது பார்வைக்கு பலம் அதிகம். அவரின் 5,7,9 பார்வைகள் முறையே துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பதிகிறது. இதன் மூலம் இந்த மூன்று ராசியினருக்கும் சனியின் கெடுபலன் குறைந்து நன்மை அதிகரிக்கும்.

குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஐந்து ராசியினருக்கு நன்மையும், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மரகம், மீனம் ஆகிய ஏழு ராசியினருக்கு சுமாரான பலனும் நடக்கும். இந்த ஏழுராசியினரும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவக்கிரக மண்டபத்தில் உள்ள குருவுக்கு வெண்முல்லை மாலையும், மஞ்சள் வஸ்திரமும் சாத்தி வழிபடுவது அவசியம். வியாழனன்று விரதமிருந்து, அன்று மாலையில் தட்சிணாமூர்த்திக்கு கடலைப்பொடி அன்னம் நைவேத்யம் செய்து தானம் செய்யலாம். 

குருவின் அதிதேவதையான பிரம்மாவை வழிபடுவதும், குருவுக்குரிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் ஆலய தரிசனம் செய்வது நன்மைக்கு வழிவகுக்கும். சிவன் கோயிலில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, வில்வம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குவது நல்லது. நெய்தீபம் ஏற்றுவதும் சிறப்பு. வியாழக்கிழமைகளில், ""குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹ குரு சாக்ஷõத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ என்னும் ஸ்லோகத்தை 12 முறை சொல்லி வணங்கினால், குருவால் ஏற்படும் சிரமங்கள் குறையும். மிதுன ராசியில் சஞ்சரிக்கும் ஓராண்டுக்குள் குரு தலங்களான திருச்செந்தூர், ஆலங்குடி (திருவாரூர்), பட்டமங்கலம் (சிவகங்கை) தென்குடித்திட்டை (தஞ்சாவூர்), குருவித்துறை (மதுரை), ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று தரிசித்தால் கெடுபலன் நீங்கி நன்மை அதிகரிக்கும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

குருபெயர்ச்சி- 2013- மீன ராசி - பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்

                                                     ஓம் சிவ சக்தி 


நீதி நேர்மை தவறாத மீனராசி அன்பர்களே! 

உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரித்த குருபகவான், மே28ல் சுகஸ்தானமான 4ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவர் தன் பார்வை பலத்தால் 8,10,12 ஆகிய இடங்களை பலம் பெறச் செய்கிறார். ராசிக்கு 8ல் அமர்ந்திருக்கும் சனியின் பார்வை 2,5,10 ராசிகளில் பதிகிறது.சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா!சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே அல்லப்பா அகிலங்கள் எல்லாம் தோற்றுஅப்பனை ஆரண்யம் சென்றார் என்றால்நல்லப்பா நாளதனில் குருவும் ஏறநரச்சுகமும் கிட்டாது நலிவும் உண்டுமல்லப்பா மண்ணாலும் பொன்னாலும் வேதைமகத்தான குரு அதனின் கொடுமை தானே!என்கிறது ஒரு வெண்பா.

இதன்படி, சோதனைகள் கடுமையாக இருக்கும் என்பது தெளிவாகிறது.குருவின் பலத்தால் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். ஆனால், உடல்நிலையில் அவ்வப்போது சிரமம் உருவாகலாம், கவனம். பொருளாதார நிலையில் பணப்பற்றாக்குறைக்கு ஆளாவீர்கள். இயன்றவரை நிதானமாகப் பேசுவது நன்மை தரும். சிலர் வாக்கு கொடுத்துவிட்டு அதைக் காப்பாற்ற முடியாமல் தவிப்பர்.மன தைரியத்திற்கு குறைவிருக்காது. எந்தச் செயலையும் சவாலாக எடுத்துக் கொண்டு முன்னேற முயல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம். 

அவர்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைப்படலாம். அதனால், விவேகத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். தாயின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். வீடு,மனை வாங்கும் முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். வீடு, வாகன வகையில் இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது நல்லது. மராமத்துச் செலவு அடிக்கடி ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் பின்தங்கலாம். அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி வழிகாட்ட முயல்வீர்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். அலைச்சலால் அடிக்கடி உடல்அசதிக்கு ஆளாவீர்கள். சிலருக்கு உஷ்ணம், வயிறு சம்பந்தமான வியாதிகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவைப்படும். 

அறிமுகமில்லாதவர்களிடம் கடன் வாங்குவது கூடாது.திருமண முயற்சிகளில் தடைகளைச் சந்திக் வாய்ப்புண்டு. உறவினர்கள் ஆதரவும் ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். அஷ்டமத்துசனியின் தாக்கத்தால் எதிரிகளின் பலம் அதிகரித்தாலும், குருவின் பார்வை பலத்தால் நிலைமையைச் சமாளிப்பீர்கள். எதிரிகள் விஷயத்திலும் முன்யோசனையுடன் செயல்படுவது பிரச்னையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

தந்தையின் உடல்நலம் சீராக இருக்கும். அவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் குரு,சனி இருவரின் பார்வையும் படுவதால், நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும். அஷ்டமத்துச் சனியின் தாக்கத்திற்கு ஆளானாலும், குருவின் பார்வை பலத்தால் நிம்மதியை ஓரளவு வாழ்வில் பெறுவீர்கள். சுயதொழில் துவங்க விரும்புபவர்கள் உரிய காலம் வரும் வரை பொறுத்திருப்பது நல்லது.

தொழிலதிபர்கள்: உங்கள் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. உற்பத்தியை அதிகப்படுத்திய பிறகு, விற்பனை சரியில்லையே என்ற நிலை ஏற்படலாம். எனவே, ஆர்டர் வாங்கியபின், உற்பத்தி செய்வது லாபத்தை தக்க வைக்கும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும்.கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் தான் தொழிலில் லாபத்தை தக்க வைக்க முடியும். 

வியாபாரிகள்: அளவான மூலதனத்துடன் அதிக முயற்சியினால் வியாபாரத்தில் உள்ள அனுகூல விஷயங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். சந்தை போட்டியை சமாளிப்பதில் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வீர்கள். சராசரியைவிட விற்பனை இலக்கின் அளவு குறையும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். நிர்வாக நடைமுறை மற்றும் குடும்ப செலவுகளுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி செயல்படுவது அவசியம். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானம் ஓரளவு கிடைக்கும். சிலசமயம் அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கும் ஆளாவர். சிலர் பணியில் குளறுபடியை எதிர்கொண்டு ஒழுங்கு நடவடிக்கையினால் சில சலுகைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்.  

பெண்கள்: குடும்பப் பெண்கள் உடல்நல ஆரோக்கியத்தை தகுந்த முறையில் பாதுகாத்துக் கொள்வதால் மட்டுமே அன்றாடப் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்ற இயலும். குடும்பத்தின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். உறவினர்களிடம் மனக்கிலேசம் வராத அளவில் நிதானித்து பேசுவது நல்லது. பணிபுரியும் பெண்கள் கூடுதல் கால அவகாசத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் லாபவிகிதம் குறைத்து விற்பதால் மட்டுமே புதிய ஆர்டர் எதிர்பார்த்தபடி கிடைக்கும். 

மாணவர்கள்: உயர்கல்வி முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வைக்கும் சூழ்நிலையே அமையும்.எதிர்கால லட்சியங்களை மனதில் கொண்டு அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே ஞாபகத்திறன் வளரும். கவுரவமான தேர்ச்சிவிகிதம் பெற இயலும். பெற்றோர் மனம் வருந்தாத அளவில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் தவிர்க்கவும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி கிடைக்கும். 

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதில் தகுதிக்கு மீறிய எவ்வித வாக்குறுதியும் தரக்கூடாது. எதிரியின் செயல்களினால் சிரமமும் மனவருத்தமும் அடைவீர்கள். இருப்பினும் சுயகவுரவத்தை பாதுகாக்கும் எண்ணத்துடன் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவீர்கள். அதிகாரிகளிடம் இதமான அணுகுமுறை பின்பற்றுவதால் அரசு தொடர்பான அனுகூலம் ஓரளவு பெறலாம். விவகார பேச்சுக்களில் நிதானித்து நடந்துகொள்வது நல்லது. 

விவசாயிகள்: விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்படும். மகசூல் சுமாராக இருக்கும். பயிர் வளர்க்க கூடுதல் பணம் தேவைப்படும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். சொத்து ஆவணத்தின் பேரில் கடன் பெறுபவர்கள், நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்கினால், மலைபோல் வரும் சோதனைகள் பனிபோல் நீங்கி விடும்.

பரிகாரப்பாடல்:
 
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு
அங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

குருபெயர்ச்சி- 2013- கும்ப ராசி - பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்

                                                     ஓம் சிவ சக்தி 


வெற்றி தோல்வியை சமமாகக் கருதும் கும்பராசி அன்பர்களே!
 
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5க்கு பெயர்ச்சியாகிறார். இதனால், குருபலம் உண்டாகப் போகிறது. இவர் 1,9,11 ஆகிய ராசிகளைப் பார்வையால் பலப்படுத்துகிறார். 9ல் இருக்கும் சனியின் பார்வை 3,6,11 ஆகிய ராசிகளில் பதிகிறது. பெரு பதினொன்றைத் தேழ் பேர், ஒன்பதாம் இரண்டில் தேவ குருவரில் செல்வம் சிரூர், குதிரை வெண்குடை தீவர்த்திதருமமும் தானமுண்டு, தாய் தந்தை துணையும் உண்டாம்அருமையும் பெருமையுண்டாம், அரசர் சேவையும் உண்டாமேஎன்கிறது ஒரு ஜோதிட வெண்பா.

ஆம், குரு ஐந்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆயுள்பாவம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் குருவின் சஞ்சாரத்தால் பல துன்பங்களில் சிக்கித் தவித்தீர்கள். தற்போது குருவின் பார்வை ராசியில் பதிவதால் உடல் பொலிவு பெறும். ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரநிலை உயர்ந்து பணப்பற்றாக்குறை நீங்கும். புதியவகையில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில்களில் ஈடுபட்டால் பணம் கோடியாய் கொட்டும். குடும்பத்தேவை நிறைவேறும். பழைய கடன்பாக்கியைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது, கவனமாக இருப்பது நல்லது.காரணமே இல்லாமல் அவ்வப்போது மனதில் பயம் உருவாகும்.

 சகோதரர் வகையிலும் எச்சரிக்கை தேவைப்படும். அளவுக்குமீறிய உதவிகளைச் செய்து அவதிக்கு ஆளாகலாம் கவனம். சிலநேரத்தில் தேவையற்ற வாக்குவாதம், வம்புகளைச் சந்திக்க இடமுண்டு. தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை. வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலருக்கு வீடு, இடமாற்றம் ஏற்படும். வாகன வகையில் ஓரளவு ஆதாயபலன் பெறுவீர்கள். மராமத்துச் செலவைக் குறைக்க முடியாது. புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள் குருவருளால் மழலை பெற்று மகிழும் சந்தர்ப்பம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

பிள்ளைகள் வகையில் மருத்துவச் செலவு இனி செய்ய இடமில்லை. அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் உண்டாகும். மொத்தத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கடந்த இரு ஆண்டுகளாக இருந்து வந்த திருமணத் தடை அகலும். உறவினர் ஆதரவால் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கருத்துவேறுபாடு நீங்கி கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். சத்ரு ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நீங்களே எதிரியாக இருப்பீர்கள். 

எந்த விஷயத்தையும் காரணமின்றி தள்ளிப் போடுவதாலும், முடிவு எடுக்க முடியாமல் திணறுவதாலும் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். தந்தையின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். அதே சமயத்தில் பூர்வீகச் சொத்து பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு உண்டாகும். கல்வி ஸ்தானம் மந்தகதியில் இருப்பதால் உயர்கல்வி கற்பதில் தடையுண்டாகும். மொத்தத்தில் குருவின் சஞ்சாரத்தால் சனியின் தாக்கம் பெருமளவு குறைந்து விடும். பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கினாலும், அதற்கான தீர்வும் உடனடியாகத் தென்படும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி, தொழில்நுட்ப உதவி எளிதாக கிடைக்கும். 

தொழிலதிபர்கள்: தொழிலதிபர்களுக்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். தொழிலில் அபிவிருத்தி பணிகளை திறம்பட மேற்கொள்ள புதிய திட்டம் உருவாக்குவீர்கள். எதிர்பார்த்த பணவசதி தாராள அளவில் கிடைத்து பணிகளை மேற்கொள்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவைத் தரும். நிர்வாக பணியில் புத்திரர்களுக்கு தகுந்த பயிற்சி தந்து பொறுப்புடன் செயல்பட உதவுவீர்கள். புதிய கிளை துவங்கவும் அனுகூலம் உண்டு. 

வியாபாரிகள்: சந்தையில் போட்டி குறைந்து வியாபாரத்தில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் பேராதரவு கிடைத்து விற்பனை இலக்கில் வியத்தகு சாதனை புரிவீர்கள். லாபம் அதிகமாக இருக்கும். சில வகைகளில் கிடைக்கும் உபரி பணத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். கூடுதல் கிளை துவங்குகிற முயற்சி நிறைவேறும். சக தொழில் சார்ந்தவர்கள் ஒத்துழைப்பு தருவர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். அரசு, நிதி நிறுவனங்களில் பெற முயற்சிக்கிற உதவி கிடைக்கும். 

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருமித்த மனதுடன் செயல்பட்டு பணிகளை வேகமாக முடிப்பர். பணிச்சுமை எவ்வளவு அதிகரித்தாலும் இன்முகத்துடன் முடித்து விட்டு, அடுத்த வேலையைத் தரத்தயாரா என கேட்குமளவு மனநிலையும், உடல்நிலையும் ஒத்துழைக்கும். ஓவர்டைம், சம்பள உயர்வு, விரும்பிய பதவி உயர்வு, விண்ணப்பித்த கடனுதவி தாமாக வந்து சேரும்.

பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்து கொள்வர். தாராள பணவசதி பெற்று அத்தியாவசிய செலவுகளை மனமகிழ்வுடன் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். ஆடை, ஆபரணம் விரும்பியபடி வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை வளர்த்து பணிகளை வேகமாக முடிப்பர். தாமதமான சலுகைகள், பதவி உயர்வு எளிதாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைத்து மூலதன தேவைகளுக்கு பயன்படும்.பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

மாணவர்கள்: முறையான பயிற்சியை பின்பற்றி பாடத்திட்டங்களை மனதில் எளிதில் பதித்துக்கொள்வீர்கள். நல்ல மார்க் பெற இடம் உண்டு. படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெற ஒருவருக்கொருவர் உதவி கரமாக செயல்படுவர். தாய், தந்தையின் அன்பு, பாசம் மனதை நெகிழ வைக்கும். விளையாட்டு, தனித்திறன் வளர்ப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பாராட்டு, பரிசு கிடைக்கும். படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பணிவாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் சேவை புரிந்து ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேற அதிகாரிகளின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். எதிரிகளால் வருகிற இடையூறுகளை எப்படியாவது சரிக்கட்டி விடுவீர்கள். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணிக்கு அதிகளவில் உதவிகரமாக செயல்படுவர். சொத்து வாங்க அனுகூலம் உண்டு. 

விவசாயிகள்: விவசாயப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தாமதமின்றி கிடைக்கும். பணவசதியும் சீராக இருக்கும். அதிக மகசூல் கிடைத்து நல்ல வருமானம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் கணிசமான லாபமும் கிடைக்கும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கினால் உங்கள் நிலையில் மேலும் முன்னேற்றமாகி புகழும் கிடைக்கும்.

பரிகாரப் பாடல்:

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி
ஓவாத சந்தத்து ஒலியே போற்றி
 ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>

குருபெயர்ச்சி- 2013- மகர ராசி - பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்


                                                    ஓம் சிவ சக்தி 

 
எதிலும் பொறுமையை கடைபிடிக்கும் மகர ராசி அன்பர்களே !

உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் 6ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவரின் பார்வை ராசிக்கு 2,10,12 ஆகிய இடங்களில் பதிகிறது. 10ல் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 4,7,12 ஆகிய இடங்களில் விழுகிறது.கேளப்பா குருபதியும் ஆறில் ஏற கெடுதி மிகச்செய்வன் மாபலியாம் மன்னன்சீரப்பா சிறைக்கூடம் சென்றாரய்யாசிவசிவா தேவர்களின் கொடுமையினாலேஈரப்பா ராஜபயம் கலகம் துன்பம் இல்லதனில் களவும் போம் கிலேசம் மெத்தவீரப்பா வெகுபயமாய் சர்ப்பதோஷம் வேந்தன் நின்ற பதியறிந்து வினையை மூட்டே!என்கிறது ஒரு வெண்பா

இதன்படி, ஆறாம் இடத்து குரு மூலம் சிரமங்களைச் சந்திக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஓராண்டுகாலமாக குருவின் சுபஸ்தானத்தால் நன்மையைப் பெற்ற நீங்கள், இப்போது சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இருந்தாலும் மனதளவில் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். மனதில் தைரியம் குறைய அனுமதிக்காதீர்கள். சகோதர, சகோதரிகள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட இடமுண்டு. அவர்களிடம் ஒதுங்கி நடந்து கொள்வது நல்லது. தாயின் உடல்நிலை பாதிக்கலாம். 

அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளவும் வாய்ப்புண்டு. வீடு,வாகனத்தில் புதிய மாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது பிரச்னையைக் குறைக்க உதவும். குழந்தைகள் கல்வி,வேலைவாய்ப்பில் பின்தங்க வாய்ப்புண்டு. தக்க அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலையிலும் அக்கறை தேவைப்படும். உடல்ரீதியான பிரச்னைக்கு உள்ளாவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையை உடனுக்குடன் சரிசெய்வது அவசியம். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் விடாமுயற்சி தேவைப்படும். உறவினர்களின் ஆதரவும் சுமாராகவே இருக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடும்ப அமைதியைக் குலைக்கும் சூழ்நிலை உள்ளது. 

அக்கம்பக்கத்தினரோடு அளவாக பழக்கம் வைத்துக் கொள்வது நன்மைஅளிக்கும். எதிரி ஸ்தானம் பலம் பெறுவதால் நண்பர்கள் கூட பகைவர்களாக மாற இடமுண்டு. அதனால், எதிலும் நிதானமாக இருப்பது அவசியம். பூர்வீகச் சொத்தில் பிரச்னை உருவாகும். பாகப்பிரிவினை போன்ற முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. என்ன தான் கஷ்டசூழ்நிலை இருந்தாலும், பணப்புழக்கம் ஓரளவு கைகொடுக்கும். இதனால், மனதை சலனப்படுத்திக் கொள்ளாமல், இறை வணக்கத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தி ஆறுதல் பெறலாம். 

ஆறாமிட குரு காலத்தில், கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். வாங்கினால் அதை அடைக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.இந்த சமயத்தில், ஏதாவது புண்ணியத்தலத்துக்கு சென்று வருவது நல்லது. குடும்பத்துடன் சென்று வந்தால் இன்னும் சிறப்பு. பணவிஷயத்தில் வாழ்க்கைத்துணை நீங்கலாக பிறரை நம்ப வேண்டாம்

தொழிலதிபர்கள்: கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். சுமாரான உற்பத்தியும், அதற்கேற்ற மிதமான பணவரவும் இருக்கும். சிலர் தொழிலுக்காக கடன் வாங்கவும் செய்வர். நிர்வாக நடைமுறைகளில் கூடுதல் கவனம் கொள்வதால் உற்பத்தி, தரத்தின் அளவை சராசரிக்கு கொண்டுவர இயலும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக, இக்கட்டான சமயங்களில் தப்பி விடலாம். ஆனால், அவர்களுக்கு சலுகை தரும் போது செலவு கூடும்.  


வியாபாரிகள்: சந்தையில் உருவாகிற போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். விற்பனையில் சுமாரான இலக்கை அடைவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதால் நிறுவனத்திற்கு நற்பெயருடன் பணப்புழக்கத்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். சரக்கு கிட்டங்கியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொண்டு புதியவர்களின் அறிமுகம் பெறுவீர்கள். 

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை, சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் தவிர்க்கலாம். பணிச்சுமைக்கு ஆளாவதோடு, எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதே நேரம், மிதுன குருவின் ஸ்தான பலத்தை விட, அதன் பார்வை பலம் உங்களுக்கு பணியிலுள்ள சிரமங்களைக் குறைத்து விடும். உழைப்புக்கேற்ற வகையில் சீரான ஓய்வு மேற்கொள்வதால் உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும். 

பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வர். உடல்நலத்தை சரிவர பேணுவதால் மருத்துவ செலவு அதிகரிக்காமல் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் பணியிட சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் சீரான உழைப்பினால் உற்பத்தி, விற்பனை அளவை பாதுகாத்துக் கொள்வர். சுமாரான லாபம் கிடைக்கும்.

மாணவர்கள்: உயர்கல்வி முயற்சிகளில் பிற்போக்கான நிலை தென்படும். உடல் நலக்குறைவும், மனச்சோர்வும் கல்விவளர்ச்சிக்கு தடையாக அமையலாம். வெளியிடங்களில் சுற்றுவதை குறைத்து படிப்பில் தகுந்த கவனம் கொள்வதால் மட்டுமே தரதேர்ச்சி விகிதம் சீரான அளவில் கிடைக்கும். படிப்புக்கான பணவசதியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சக மாணவர்களுடன் படிப்பு தொடர்பான நல்ல கருத்துக்களை பகிர்ந்துகொள்வீர்கள்.  படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்களுக்கு ஓரளவு சம்பளத்தில் வேலை அமையும்.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிக அக்கறையுடன் பணி புரிவது அவசியம்.அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதிரிகள் தருகிற தொந்தரவிலிருந்து சில படிப்பினைகளை கற்றுக் கொள்வீர்கள். சமரச பேச்சுவார்த்தைகளில் இருதரப்பு நியாயம் உணர்ந்து பேச வேண்டும். இல்லாவிட்டால், சிரமம் தான் வரும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி  கிடைக்கும். 

விவசாயிகள்: அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் முக்கியஸ்தரின் உதவியால் சமரச தீர்வு எளிதில் பெறலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை அளவான செலவில் நடத்துவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் சகல நன்மையும் பெறுவீர்கள்.

பரிகாரப் பாடல்:

ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
துர்க்கா லட்சுமியே நமஸ்காரம்
புவனேஸ்வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடனே உனை நாடி வந்தோம்
பண்புடனே உன்னை பார்க்க வந்தோம் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

குருபெயர்ச்சி- 2013- தனுசு ராசி - பலன்கள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்

                                                     ஓம் சிவ சக்தி

சாந்தமான குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரித்த குரு, மே28 முதல் 7ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவருடைய பார்வை பலத்தால் 1,3,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 11ல் அமர்ந்து 1,5,8 ஆகிய ராசிகளை பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இது இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். குரு பதினொன்றுஏழ் ஒன்பான் கூறும்ஐந்து இரண்டில் நிற்க திருமகள் கிருபை உண்டாம் தீர்த்த யாத்திரை உண்டாம் தரும தானங்கள் உண்டாம் தந்தை தாய் உதவி உண்டாம்அருமையும் பெருமையும் உண்டாம்அரசர் சேவையும் உண்டாமே!என்று ஏழாம் இட குரு தரும் நற்பலன்களைப் பட்டியலிடுகிறது இந்த ஜோதிட வெண்பா.

 இதன்படி, வாழ்வில் எல்லாவழிகளிலும் நன்மை பெறுவீர்கள். ஆயுள் அதிகரிக்கும். தொல்லை கொடுத்த நோய்நொடி நீங்கும். கடந்த காலத்தில் உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் கூட வலியவந்து உங்களின் நட்பைத் தேடுவர். வருமானம் தாராளமாக இருக்கும். ஆனால், ஆடம்பர சிந்தனையால் செலவும் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். அளவுக்கு மீறி வாக்களித்துவிட்டு சிரமத்திற்கு ஆளாகலாம், கவனம். தைரிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால், மனோதிடம் அதிகரிக்கும். 
இருந்தாலும் தைரியத்தோடு புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக் கொள்வது நல்லது. 

கருத்துவேறுபாடு நீங்கி சகோதரர்களிடம் இணக்கம் கூடும். சகோதர வழியில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. தாயின் ஆரோக்கியம் சீர்பெறும். அவரது தேவைஅறிந்து உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய மனை, வீடு வாங்கவோ அல்லது கட்டவோ வழி பிறக்கும். வாகன வகையிலும் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வியில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. அவர்களுக்கு தேவையான அறிவுரைகளைக் கூறி நெறிப்படுத்துவது அவசியம். அலைச்சலைத் தவிர்க்க முடியாது.

 தொல்லை அளித்து வந்த கடன் பிரச்னையிலிருந்து பெருமளவு விடுபடுவீர்கள். ஏழாம் வீட்டில் குரு இருப்பதால், திருமணத்திற்கு காத்திருப்போருக்கு இது சுபமான காலகட்டம். உறவினர்களின் ஒத்துழைப்போடு சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துபேதம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் பயந்தோடுவர். மறைமுக எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். 

உங்களின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவர். தந்தையின் உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டாலும், பாதிப்பு ஏதும் நேராது. தந்தையுடன் உறவு சீராக இருக்கும். தடைபட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு உருவாகும். சிலர் கல்வி பெறும் நோக்கில் வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி அமைவதுடன், நண்பர்களின் உதவியும் கிடைக்கும். 

தொழிலதிபர்கள்: தொழிலில் எல்லா நிலைகளிலும் நன்மைகளை வாரி வழங்க மிதுனகுரு காத்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அமோக வளர்ச்சி காணலாம். கல்வியை முடித்துவிட்டு, புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் குருபலத்தால் நற்பலன் காண்பர். உற்பத்தி, தர உயர்வில் சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உற்பத்தி செழித்து பெரும் லாபம் அடைவீர்கள். புகழ், செல்வாக்கு வளரும். தொழிலதிபர் சங்கப்பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்று கவுரவமான பதவியில் அமருவீர்கள். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். தொழிற்சாலை அபிவிருத்தி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரிகள்: அனுபவசாலிகளின் ஆலோசனை வரப்பிரசாதமாக கிடைத்து வியாபார நடைமுறையில் சில மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவினால் விற்பனை, பணவரவில் முன்னேற்றம் அடைவீர்கள். சந்தையில் நன்மதிப்பு, புகழ் பெறுவீர்கள். பாக்கிப் பணத்தை எந்த வித சிரமமும் இன்றி எளிதில் வசூல் செய்வீர்கள். புதிய கிளை துவங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். வங்கி நிதியுதவி எதிர்பார்த்த அளவில் கிடைக்கும். 
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் பணித்திறனை வளர்த்து ஆர்வமுடன் செயல்படுவர். குறிப்பிடத்தக்க அளவு சம்பளம் உயரும். பணிச்சுமை குறையும். ஓவர்டைம் போன்ற வகைகளால்வருமானம் கூடும். குறித்த காலத்தில் வேலைகளை முடிப்பதால், அதற்குரிய சலுகைகளையும் பெறுவீர்கள். நிர்வாகத்தின் பார்வையில் உங்கள் மீதான மதிப்பு உயர்ந்து பொறுப்பான பதவி கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். அதிக வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள். 

பெண்கள்: குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். எதிர்கால வாழ்வு நடைமுறை பற்றிய நம்பிக்கை வளரும். சேமிப்பு உயரும். நீண்ட காலமாக வாங்க விரும்பிய நகை அல்லது ஆடம்பரப் பொருட்களை இந்த கால கட்டத்தில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக இப்போது இடும் திட்டம் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை வளர்த்துக் கொள்வர். வேலைப்பளு குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் அதிக ஆர்டர் பெறுவர். உற்பத்தி, விற்பனையில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். லாபம் அபரிமிதமாக இருக்கும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் கைகூடும்.

மாணவர்கள்: அறிவுத்திறன், ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் சுமூக உறவு கொள்வர். ஆசிரியர்களும், பெற்றோரும் படிப்புக்கு தேவையான உதவி வழங்குவர். பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அதிக மார்க் பெறுவீர்கள். உங்கள் தனித்திறமை பாராட்டப்பட்டு, வெகுமதி கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு கவுரவமான சம்பளத்தில் பணி கிடைக்கும். 

அரசியல்வாதிகள்: சமயோசிதமாக செயல்பட்டு ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். நன்மதிப்பும் புகழும் அதிகரிக்கும். எதிர்ப்பாளர்களால் இருந்த தொல்லை விலகும். கவுரவமான பதவி, பொறுப்பு கிடைக்கும். புத்திரர்களின் நுட்பமான ஆலோசனை உங்களை முன்னேற்ற பாதையில் நடைபோட வைக்கும். சமரச பேச்சுக்களில் நல்ல தீர்வு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும்.

விவசாயிகள்: தாராள பணவசதி கிடைத்து விவசாயப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மகசூல் அதிகரித்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் திருப்திகரமான லாபம் வந்துசேரும். புதிய நிலம் வாங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நடத்துவீர்கள்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் வசதிகள் மேலும் மேலும் உயரும்.

பரிகாரப் பாடல்:

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலி வாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
புஷ்கலா நாதனே வருக வருக
பூரணை துணைவா வருக வருகவே!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

குருபெயர்ச்சி- 2013-விருச்சிக ராசி - பலன்கள் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்

                                                         ஓம் சிவ சக்தி 


முருக பெருமானின் அம்சத்தில் பிறந்த விருச்சிக ராசி அன்பர்களே !
 
உங்கள் ராசிக்கு7ல் சஞ்சரிக்கும் குரு, மே28 முதல் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதை அஷ்டம குரு என்பர். அவரின் சுபபார்வை 2,4,12 ஆகிய ராசிகளில் பதிகிறது. விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிக்கும் சனி 2,6,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து வல்லவே பன்னிரண்டில் இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டூர வாதம்புல்லவே சகோதரர் தாய் மனையாள் புத்திரரின்நலம் கெடும் பொருளும் போகும் அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே!என்கிறது ஒரு வெண்பா.

எட்டில் குரு வந்தால், அவரால் நடக்க வேண்டிய நன்மைகள் தடைபடும் என்று எச்சரிப்பதே இந்த ஜோதிட வெண்பாவின் நோக்கம். ஏழரைச்சனி வேறு நடப்பதால் நிலைமை கொஞ்சம் சிக்கலோ என்று எண்ண வேண்டியுள்ளது. இருப்பினும், குருவின் 12ம் இட பார்வை ஏழரையின் தாக்கத்தை குறைக்கும்.மற்ற கிரகங்களால் கடுமையை எதிர்கொண்டாலும் கேதுவின் அனுகூலத்தால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். அதனால்,அடிக்கடி கோயிலுக்குச் செல்வதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். படைத்தவன் தானே நம்மைப் பாதுகாக்க முடியும்! குருபலத்தால் ஆயுள்பலம் அதிகரிக்கும், இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது அவசியம். எட்டாம் இட குரு வாழ்வில் தடுமாற்றத்தை உருவாக்கும்.

பணப் பற்றாக்குறை உண்டாகும். கடன்விஷயத்திலும் உஷாராக இருப்பது அவசியம். சிக்கனத்தை கடைபிடித்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில்சலசலப்புக்கு பஞ்சமிருக்காது. பேச்சில் மிகவும் கவனம் தேவை. நிதானம் இழந்து பேசுவதால் பிரச்னைக்கு உள்ளாகலாம், கவனம். சகோதரர்கள் உங்களிடம் உரிமை என்ற பெயரில் மோதுவார்கள். அவர்களிடம் அளவாக உறவு கொள்வது நல்லது. இயன்ற உதவிகளை அவர்களுக்கு மறுக்காமல் செய்வதன் மூலம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கலாம். முரட்டு தைரியம் அதிகரிக்கும். 

இது சில சிக்கல்களில்மாட்டி விடும். கவனம். தாயிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். அவர்களின் தேவையை நிறைவேற்றி அன்புக்குரியவராகத் திகழ்வீர்கள். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்வது போதுமானது. வீட்டில் பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.குழந்தைகளின் கல்வி, ஆரோக்கிய விஷயங்களில் அதிருப்திக்கு ஆளாவீர்கள். விழிப்புடன் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது. அதிக அலைச்சல் இருக்கும்.

 உங்கள் உடல்நிலை சீராக இருக்காது. உஷ்ண வியாதிகளால் அவதிப்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தடைகள் குறுக்கிடும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது சந்தேகம் தான். கணவன், மனைவி கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக்கொடுக்கும் மனோபாவம் குறையும். குடும்ப உறுப்பினர்கள் சிலரே பிரித்தாளும் தந்திரத்தை செய்து கொண்டிருப்பர். உஷார்.நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாற வாய்ப்புண்டு. அந்தரங்கப் பணிகளை, உங்களின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் சூழ்நிலையும் இருக்கிறது. பூர்வீகச் சொத்தின் மூலம் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். 

தொழிலதிபர்கள்: உற்பத்தி மிக சுமாராகவே இருக்கும். லாபம் எதிர்பார்த்த அளவு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் குளறுபடி ஏற்படலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். தொழில் கருவிகளை மாற்றியமைத்து உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் சிரமத்தின் பேரில் நிறைவேறும். தொழிற்சாலை இடவசதியை அதிகரிப்பீர்கள். பண வரவு செலவில் நேரடி கண்காணிப்பு நல்லது.

வியாபாரிகள்: சந்தையில் போட்டி அதிகரிப்பதால் விற்பனை இலக்கை அடைவதில் பின்தங்குகிற நிலை ஏற்படும். பொருட்களின் தரம் உயர்வாகவும், அளவான லாபத்திற்கு விற்பதன் மூலமும், வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். நிர்வாகச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்வதால் பணம் மிச்சமாவதுடன், உடல்நலமும் பாதுகாக்கப்படும். வியாபார அபிவிருத்திக்காக எதிர்பார்க்கிற நிதியுதவி கிடைக்கும். 

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்கிற நிலை உண்டு. சோம்பல் குணம் மேலோங்கும் என்பதால், மனஉறுதியுடன் அன்றைய பணியை அன்றே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லாதபட்சத்தில் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சிலர் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். சலுகைகள் அதிகம் இராது. எனவே, குடும்பத் தேவைகளுக்காக அலுவலகத்தில் கடன் வாங்க நேரும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம். 

பெண்கள்: குடும்பப்பெண்கள் கணவருடன் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுவர். நல்லோரின் அன்பு, ஆசி கிடைத்து மனதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்பதால், சிக்கன செலவு செய்து சிரமம் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே பணியில் குளறுபடி, ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் குறைவே. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் போதும். கடுமையாக உழைத்தால் தான் உற்பத்தி, விற்பனையை காத்துக் கொள்ள முடியும். 

மாணவர்கள்: உடல்நலத்தை நல்லமுறையில் பராமரித்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் கவனம் ஏற்படும். படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். சிலர், பகுதிநேர வேலை பார்த்து படிப்புக்கான பணச்செலவை ஈடுகட்ட முயற்சிப்பர். சக மாணவர்களிடம் கருத்துபேதம் வராத சுமூக சூழ்நிலை இருக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு குறை ஏற்படாமல் படிப்பில் அதிக கவனம் கொள்வது நல்லது. வண்டியை வேகமாக ஓட்டுவது கூடாது. 

அரசியல்வாதிகள்: செயல்கள் நிறைவேறுவதற்குள் பலவித சோதனை, எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையுடன் நடந்துகொள்வதால் மட்டுமே நன்மை கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி ஊக்கம் தரும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு எளிதல்ல. எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென செயல்பட்டால் நேரமும் பணமுமே விரயமாகும். கடன் கொடுத்த பணம் வசூலாகும். வாகன வசதிபெற வழியுண்டு. 

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதமும் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். அளவான மகசூல், அதற்கேற்ப பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை இழுத்தடிக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்குவதால் பிரச்னைகளின் தீவிரம் குறைந்து விடும்.

பரிகாரப் பாடல்:

அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!
துன்பம் அகற்றிடும் சீலா பாலா!
சிவகுமாரா முருகா வருக!
பரமா! புருஷா! வரம் தர வருக!
கலங்காது எனையே காத்திட வருக!
காவாய் முருகா கார்த்திகை குமரா!
வா வா முருகா! வல்லமை தரவே.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

சமீபத்திய கருத்துகள்