Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 26 அக்டோபர், 2013

கடன் பிரச்சனை உடனடியாக - நிச்சயமாக தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்களேன் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

                                                                ஓம் சிவ சக்தி

அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 
 
எம்மிடம் ஜோதிடம் பார்க்க வரும் நபர்களில் ஒரு சிலர் தீராத கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறேன் . இதிலிருந்து விடுபட பல பரிகாரங்கள் - கோயில் குளம் என அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துவிட்டேன் .ஆனால் எந்த வித பலனும் இல்லை என சொல்பவர்களும் உண்டு. 

இந்த கடன் பிரச்சனை தீர பரிகாரம் பழம் பெரும்  நூலான விரத சூடாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. கீழே கூறப்பட்ட இந்த பரிகாரத்திற்கு உடனடியாக பலன் கிடைக்க கடன் பிரச்சனைக்கு உண்டான நபர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்க தேதியில் பிறந்து இருப்பார் .

 ஒருவர் பிறந்த ஆதிக்க தேதியில் உள்ள கிரகமும் - அந்த நபரின் பெயரின் ஆதிக்கத்தில் உள்ள கிரகமும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகத்தை குறிக்க கூடிய எண்களில் இருந்தால் மட்டுமே கீழ்கண்ட பரிகாரம் உடனடியாக பலனை கொடுக்கும் என்பதை இதை படிக்கும் வாசகர்கள் மறந்து விடகூடாது . விபரமாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் பிறந்த தேதிக்கு நன்மை தரும் வகையில் அவர் பெயரின் மொத்த கூட்டு எண்கள் அமைந்திருக்க வேண்டும் .

செவ்வாய் கிழமை விடியற் காலை சூரிய உதயம் தொடங்கும் நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் கடவுளை வணங்கி விட்டு குறிப்பாக முருக பெருமானின் திருவுருவ படம் பூஜை அறையில் இருக்க வேண்டும். - பின்பு மௌனமாக இருந்து விநாயகர் சன்னதிக்கு சென்று பிறர் பார்க்காதவாறு ஒரு  முழு தேங்காயை உரிக்காமல் மேல்மட்டையுடன் விநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும் . 

இவ்வாறு சமர்ப்பிக்கும்பொழுது யாரும் பார்க்க கூடாது .  பிறகு வீடு திரும்பி கருங்காலி குச்சியையோ - அல்லது தேக்கு குச்சியையோ சுவாமி விளக்கில் கொளுத்திய பிறகு நீரில் நனைத்து அந்த கரியால் தெற்கு தொடங்கி வடக்காக மூன்று சிறு கோடுகள் வரைய வேண்டும் . பின்பு இடது காலால் அதை அழிக்க வேண்டும். கீழ்கண்ட சுலோகங்களை சொல்லியபடி அதனை அழிக்க வேண்டும்.

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்சல :
நமோஸ்துதே மஹா சேஷம் ருணமாசு  விமோசய

ருணரோகாதி தாரித்ர்ய பாபஷூத அபம்ருத்யவ:
பயக்ரோத மனக்லேசா: நச்யந்து மம ஸர்வதா

ருணதுக்க வினாசாய புத்ர ஸந்தான ஹேதவே
மார்ஜயாம் யஸிதா ரேகா: திஸ்ரோ ஜன்ம ஸமுத்பவா:

துக்க தௌர்பாக்ய நாசாய
ஸூகஸந்தான ஹேதவே 
க்ருத ரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார் ஜயாம்  யஹம்.

இதன் பொருள் :

பூமியின் புதல்வரும் - பக்தர்களுக்கு அருளுபவருமான அங்காரகா! தங்களை வணங்குகிறேன் . விரைவில் என் கடன் - பிணி - வறுமை - பாவம்  - பசி - அகால மரணம் - பயம்  - கோபம் - கவலை - ஆகியவற்றை போக்குவீராக.

கடனால் ஏற்பட்ட துக்கம் விலகவும் - தொடர்ந்து குழந்தைகள் பிறக்கவும் - மூவினை பயன்களை அழித்து என்னை பாவமற்றவனாக செய்யும் இந்த மூன்று கருப்பு கோடுகளை நான் அழிக்கிறேன் . என் இடது காலால் அழிக்கிறேன் .

துக்கம் துர்பாக்கியம் நீங்கி - தொடர்ந்து சுகம் பெறவும் - என்னால் உருவாக்கப்பட்ட இந்த கரி கோடுகளைஅழிக்கிறேன் . என் தலையில் பிரம்மன்  எழுதிய துர்பாக்கிய எழுத்தை அழிக்க வேண்டும் என்பதே ஒரு பொருள் . 

கடன் பிரச்னை உடனடியாக தீர இந்த பரிகாரம் நடைமுறையில்  பலன் அளிக்க கூடிய பரிகாரமாகும். 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்