ஓம் சிவ சக்தி
யோகம் என்றாலே வாயை பிளக்கிறார்கள் . யோகமே இல்லாமல் போனால்தான் என்ன? உலகத்தில் பிறந்த அனைவரும் யோகம் பெறுவது என்றால் முடியுமா? சிலர் ஆரம்ப காலத்தில் யோகத்தோடு கூடி இருப்பார்கள்.பின்னால் தேய்ந்து விடுவார்கள். சிலர் மத்திய காலத்தில் யோகமாக இருப்பார்கள். சிலர் அந்திம காலத்தில் நல்ல யோகத்தை அனுபவிப்பார்கள். ஆக யோகமேன்பது யாருக்கும் நிரந்தரமல்ல. வரும் போகும், அவ்வளவுதான் , சிலருக்கு எந்த காலத்திலும் யோகம் ஏற்படுவதில்லை , அப்படியே மடிந்து விடுகிறார்கள். உலகத்தில் யோகமும் அவ யோகமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதற்கு ஆண்டவன் இடம் கொடுப்பதில்லை .
இருந்தாலும் மனித இனம் கிடைத்ததுடன் திருப்திபடுவதில்லை. மேலும் மேலும் ஆசைகள் வளர்ந்து கொண்டுதான் போகும். ஆசைக்கோ அளவில்லை.இப்படியாக ஆசைகள் உயர்ந்து கொண்டே போகும் மனிதனுக்கு முன்னேறுவதில் முயற்சியும் எண்ணமும் வேண்டும்.எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அவனுடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியமும் சிறப்பாக இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் எட்டா பழத்தை கண்டு கொட்டாவி விட்டதை போல் ஆகி விடும். .பூர்வ புண்யம் இருக்கிறதா? இல்லையா எப்படி தெரிந்து கொள்வது? இந்த அமைப்பை ஒருவனுடைய ஜாதக அமைப்புகள் எடுத்து காட்டும். ஒரு ஜாதகன் எந்த அளவுக்கு பாக்கியவான் என்பதை காட்டும் கிரக அமைப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
லக்னாதிபதி எந்த கிரகமோ அந்த கிரகம் லக்னத்திற்கு ஐந்தாம் இடம் ஒன்பதாம் இடம் போன்ற இடத்தில் இருந்தால் அவன் தேசத்திற்கே அதிபதி ஆவான் என்கிறது சாஸ்திரம். அதாவது இப்பொழுது உள்ள சூழ்நிலையில் ஒரு ஒரு மந்திரி பதவியில் இருக்கின்ற சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் கிரக அமைப்புகள் என்று கூட சொல்லலாம்.
லக்னத்திற்கு இரண்டாம் இடத்திலும் , பத்தாம் இடத்திலும் , லக்னாதிபதியும் , லாபாதிபதி என்று சொல்ல கூடிய பதினொன்றாம் இடத்துக்கு அதிபதியும் இருந்தால் 20 வயதிற்கு மேல் யோகமேற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
குரு -புதன் -ஏழாம் இடத்து - அதிபதி மூவரும், கேந்திரம்- திரிகோணம் இரண்டில் இருந்தால் கல்வி பயின்று ஆசிரியர் கல்லூரி புரபொசர் ஆகலாம் .
தனஸ்தானத்தில் பாக்கியாதிபதி என்று சொல்ல கூடிய ஒன்பதாம் இடத்து அதிபதி இருந்தால் செல்வந்தனாக வாழ்வான் .
சந்திரனுக்கு இரண்டில் சனி இருந்தால் தந்தையின் சொத்துக்கள் கிடைப்பதில் தகராறுகள் ஏற்படும்.
மூன்று - ஆறு - எட்டு - பதினொன்றுக்கு அதிபதிகள் நீச்ச்சமானால் செல்வ சேர்க்கைகள் ஏற்படும். சந்திர லக்னாதிபதி உச்சம் பெற்றாலும் அல்லது நீச்சம் பெற்றாலும் செல்வந்தனாக வாழ்வான்.
ஜீவனாதிபதியாகிய பத்தாம் இடத்ததிபதி நான்காம் இடத்தில் இருந்தால் புதையல் எதிர்பாராத சொத்துக்கள் கிடைக்கும் . தொழில் மேன்மை பெற்று அதன் மூலம் திடீர் தன லாபங்கள் ஏற்படும்.
சந்திரனும் சுக்கிரனும் சம சப்தமாக நின்றால் வாகன சேர்க்கை ஏற்படும். நான்காம் அதிபதி உச்சம் பெற்றால் அரண்மனை போன்ற வீட்டை கட்டுவான்.
லக்னாதிபதி வலுவிழந்து லக்னத்தை பாவ கிரகங்கள் பார்த்தால் ஜாதகருக்கு பூர்வீக சொத்துக்கள் இருக்காது .
ஜென்ம லக்னம் சர ராசி என்று சொல்ல கூடிய மேஷம் கடகம் துலாம் மகரம் போன்ற ராசிகளாக இருந்து அதற்க்கு இரண்டு பன்னிரெண்டாம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால் ராஜயோக பலன்கள் ஏற்படும்.ஆனால் பாபர் இருந்தால் தரித்திர .யோகமாகும்.
சந்திர லக்னாதிபதியும் ஜென்ம லக்னாதிபதியும் சம சப்தமாக நின்றால் தீர்க்க ஆயுள் பெற்றவனாயும் யோகவானாகவும் இருப்பான். குருவுக்கு கேந்திரத்தில் சுக்கிரன் இருந்தாலும் பிரபல ராஜ யோகம் ஏற்படும் என்று சொல்ல படுகிறது.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலு பெற்ற கிரகம் இருந்தால் , பட்டம் பதவி கீர்த்தி ஆதாயங்கள் இவைகள் மிகுந்து காணப்படும். ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் சந்திரனை பார்த்தால் விசேஷமான யோக பலன்கள் நடக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.
திரிகோண அதிபதிகளாக ஐந்து ஒன்பதாம் இடத்து அதிபதிகள் இருவரும் சேர்க்கை பெற்று நின்றால் சர்வ பவ்ம யோகம் ஏற்பட்டு தாழ்ந்த குடியில் பிறந்தவனாக இருந்தாலும் உலகத்தில் மாட மாளிகையில் மனைவி குடும்பம் இவைகளுடன் யோகமாய் வாழ்வான்.
ஒரு ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் யோகம் ஏற்படும் என்பதை மேலே சொல்லப்பட்ட கிரக அமைப்புகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் யோகம் தரும் கிரகங்களின் தெசை ஜாதகரின் ஜீவிய காலத்தில் நடந்தால்தான் அவன் ஜாதகத்தில் இருக்கும் யோகத்தின் பலனை பூரணமாக அனுபவிக்க முடியும். அப்படியின்றி ஜாதகரின் ஜீவிய காலத்தில் யோகங்களை அளிக்கும் கிரகங்களின் தெசை நடக்க வில்லை என்றால் அந்த ஜாதகரின் வாழ்க்கையில் சாதாரண பலன்கள் தான் நடைபெறும்.
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள உங்கள் இல்லத்திற்கே வந்து மிக துல்லியமான ஜோதிட பலன்கள் சொல்லப்படும் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை
விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு
அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான
பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில்
விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.