Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 27 ஜூலை, 2012

இன்று வரலட்சுமி விரதம்: மஞ்சள் வளத்துடன் வாழ்க! மங்கல குங்குமம் வாழ்க! ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
  
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைத்துஇருக்கும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும். செல்வ வளம் பெருகும். கன்னிப்பெண்களுக்கு மணவாழ்வு தேடிவரும். எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். விரதம் இருப்போர் பாராயணம் செய்யும் வகையில் லட்சுமி ஸ்தோத்திரம் இங்கு இடம்பெற்றுள்ளது.
* நாராயணனின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமித்தாயே! செல்வத்தை வாரி வழங்குபவளே! நன்மைக்கு இருப்பிடமாய் திகழ்பவளே! உன்னுடைய கடைக்கண்ணால் எங்களுக்கு அருளை வாரி வழங்குவாயாக.
* கருநெய்தல் மலர் போல அழகு மிக்க கண்களை உடையவளே! அரச பதவியும், இந்திர பதவியும் வழங்குபவளே! உன் பார்வையால் எங்கள் வாழ்வு வளம் பெறட்டும்.
* தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக. பார்க்கவ முனிவரின் மகளாக அவதரித்தவளே! திருமாலின் மார்பில் மின்னல் கொடியாய் விளங்குபவளே! உன்னருளால் எங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.
* கடலரசனின் மகளே! எல்லா வளங்களையும் ஒருசேர அருள்பவளே! உன் கடைக்கண் பார்வை எங்கள் மீது பரவட்டும். ஆளுகின்ற தலைமைப் பதவியும், விரும்பிய பொருள் வளமும் எங்களை வந்து அடையட்டும்.
* நாராயணனின் துணைவியே! கார்மேகம் போன்ற அருட் கண்களால் எங்கள் இல்லங்களில் செல்வ மழை பொழியச் செய்வாயாக.
* நாமகளாய் கல்வியையும், பூமகளாய் செல்வத்தையும், மலைமகளாய் வீரத்தையும் வழங்கும் தாயே! நல்ல செயல்களுக்குரிய நற்பலனை வழங்கும் வேத நாயகியே! உன்னை அடிபணிந்து வணங்குகிறோம்.
* தாமரை முகம் கொண்டவளே! சந்திரன், அமுதம் இவற்றோடு பிறந்தவளே! உயிர்களை காப்பவளே! தாமோதரனின் துணை வியே! முப்பத்து முக்கோடி தேவர்களால் வணங்கப்படுபவளே! உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்.
* மனதிற்கு இனியவளே! ஆடை, ஆபரணங்களைச் சூடி மகிழ்பவளே! நறுமணம் கமழ்பவளே! உன் அருளுக்குத் தகுதியான எங்களுக்கு மஞ்சள், குங்குமம் நிலைத்திருக்க அருள் செய்வாயாக!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

திங்கள், 23 ஜூலை, 2012

ஆடிப்பூரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ஆண்டாள் முகம் பார்த்த கண்ணாடி: ஆண்டாள், ரெங்கமன் னாரை நினைத்து தினமும் மாலையை சூடிக்கொள் வார். தான் அணிந்த மாலை எப்படியிருக்கிறது என இங்கிருந்த கிணற்று நீரை பயன்படுத்தியுள்ளார். அக்கிணறு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூலஸ் தானத்தின் முன்புறம் இக்கிணறு உள்ளது. இக்கிணற்றை கண்ணாடி கிணறு என அழைக்கின்றனர்.
மறுமையில் இன்பம் அடையும் வழியுண்டு: பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஏழாவது ஆழ்வாராக ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் தான் பெரியாழ்வார். பெரியதொரு நந்தவனம் அமைத்து வடபெருங்கோயில் உடையானுககு திருமாலை கட்டிச்சாற்றி வந்தார். அக்காலத்தில் ஸ்ரீவல்லப தேவன் என்னும் அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண் டிய நாட்டை ஆண்டு வந்தான். ஒரு நாள் நகர சோதனைக்கு சென்ற போது ஒரு வீட்டுத்திண்ணையில் உறங்கும் ஒரு அந்தணரைக் கண்டார். அவர் மூலம் "மறுமையில் இன்பம் அடைய, இப்பிறப்பிலே முயற்சி செய்ய வேண்டும் என்ற விசயத்தைப்புரிந்து கொண் டார். அரசனும் தன் புரோகிதரான செல்வநம்பியிடம் மறுமையில் பேரின்பம் பெற என்ன வழி என்று கேட்க, அவரிடம் வித்வான்களைக் கூட்டி பரம் பொருளைப்பற்றி நிர்ணயம் செய்வித்து அவ்வழியாலே பேறு பெற வேண்டும் என்று சொல்ல, அரசனும் இசைந்து பெருந்தனத்தை ஒரு வஸ்திரத்தில் முடிந்து ஒரு தோரணத்திலே கட்டச் செய்தார். பரதத்வ நிர்ணயம் செய்பவர், இப்பொற்கிழியைப் பரிசாகப் பெறலாம் என்று வித்வான்களுக்கு அறிவித்தார். வடபெருங்கோயிலுடையான் விஷ்ணு சித்தருடைய கனவில் தோன்றினார். நாமேபரம தெய்வம் என்று நிர்ணயம் செய்து, நீர்போய் பொற்கிழியை அறுத்துக் கொண்டு வா என்றார். விஷ்ணு சித்தரின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார். கனவு கலைந்தது. மறுநாள் அரசபை சென்றார் விஷ்ணு சித்தர். அங்கு ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள் என்றார். பொற்கிழி இவர் முன்னே தான தாழ வளைந்து தந்தது. அப்பொற்கிழியை அறுத்து வசப்படுத்தினார். ஸ்ரீவல்லப தேவன், ஆழ்வாரை தனது பட்டத்து யானை மேலேற்றி வலம் வரச் செய்தார். இவருக்கு ஸ்ரீமத்நாரயாணன், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவிகளுடன் காட்சி தந்தார். விஷ்ணு சித்தரை பெரியாழ்வார் என அழைத்தார். பொற்கிழியுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர்
சென்ற பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பணிகள் பல செய்தார். நந்தவனம் அமைத்து பூக்களைக் கொண்டு திருமாலை கட்டி கடவுளை வணங்கினார். ஆண்டாளை கண்டெடுத்து வளர்த்தார். திருப்பாவை, நாச்சியார் திருமொழியை உலகுய்யப்ப பாடுவதற் கும் காரணமாயிருந்தது. அவரை அரங்கனுக்கே அர்ப்பணித்த பெருமையுடையராவார்.
ஸ்ரீராமானுஜரை வரவேற்கும் ஆண்டாள்: கோயில் மூலஸ்தானத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கருட வாகனத்தில் எழுந்தரு ளியுள்ளனர். இது பிரணவத்தின் பிரதி பிம்பமாக அகர, உகர, மகார தத்துவ விளக்கத்தை காட் டுவதாகும். கர்ப்ப கிரகத்தை விட சிறிது தூரம் எழுந்தருளி யுள்ளனர். இதன் ஐதீகம் ஸ்ரீராமானுஜர், ஆண்டாளை சேவிக்க வந்தார். அவரை ஆண்டாள் வரவேற்க வந்ததை குறிக்கும் வகையில் இது உள்ளது. ஸ்ரீரங்க மன் னாரின் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தன்று காலையில் ஸ்ரீலட் சுமி நாராயணன் சன்னதிக் கருக்கே உள்ள மண்டபத் தில் ஸ்ரீஆண்டாள் எழுந் தருளி பக்தர் களுக்கு அருள் பாலிப்பார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேரோட்டம் திருஷ்டிக்காக பாடிய பாடல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சினார். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று துவங்கி "திருப்பல்லாண்டு பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், "நீரே பக்தியில் பெரியவர் என வாழ்த்தினார். அதுவரையில் "விட்டுசித்தன் (விஷ்ணு சித்தர்)என்று அழைக்கப்பட்ட இவர், "பெரியாழ்வார் என்னும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் பாடப்படுகிறது.
திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்?
ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் இதுதான். ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின்போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது. அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது.
108 கம்பளி: கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபாலவிலாசத்திற்கு எழுந்தருள்கின்றனர். அப்போது இம்மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துகின்றனர். குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.
பாவை நோன்பு: பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.
கன்னிகாதானம்: பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்கு செல்கிறார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவழியினர் சேர்ந்து கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பின் ரங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கிக்கொள்கிறார்.
திருமாளிகை: ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோயிலாக இருக்கிறது. இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீர் கொடுத்தாராம். எனவே, இக்கோயிலை "நாச்சியார் திருமாளிகை என்று சொல்கிறார்கள்.
முத்துப்பந்தல்: ஆண்டாள் சந்நிதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், "முத்துப்பந்தல் எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது.
மாப்பிள்ளை அலங்காரம்: திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பின்போது பேண்ட், சட்டை அணிந்து வருவர். இதுபோல இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஏகாதசி, அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு ஆகிய விழாக்காலங்களில் மட்டுமே இவர் வேஷ்டி அணிந்திருப்பார்.
தமிழக அரசு சின்னம்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார். 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. இக்கோபுரத்தை பற்றி கம்பர், ""திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம் என மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக குறிப்பிட்டு பாடியுள்ளார். பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் திருவுருவ சிற்பங்கள் இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இக்கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை. சிலைகள் இல்லாமல், தமிழர்களின் கட்டடக்கலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததும், இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இடம்பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது.
ஆண்டாள் பாடிய பாசுரங்கள்: ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.
பெருமாள் பெயர் சூட்டிய பெரியாழ்வார்: பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார் என்று பெயர் சூட்டினார்.
பூமியைக் காட்டிய அம்பாள்: ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.
ராஜாங்க கோலம்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.
கருடாழ்வாரின் மூன்று பதவி: கருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமானார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.
முப்புரிஊட்டிய தலம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாய் (சுயம்பு) ஆகிய மூன்று பேர் அவதரித்த பெருமையுடையது. எனவே, இத்தலத்தை "முப்புரிஊட்டியதலம் என்கின்றனர். திவ்யதேசங்களில் புனிதமான தலமாகவும் கருதப்படுகிறது.
108 திவ்யதேச சுவாமிகள்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவுறுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.
நீதியை நிலைநாட்டிய ஆண்டாள்: துவாபர யுகத்தின் முடிவில் பாரத யுத்தத்திற்கு பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் அவதார காரியங்கள் முடிந்து பகவான் பரந்தாமன் வைகுண் டத்திற்கு புறப்பட்டார். அப்போது தன் பக்தர்களையும் உத்தமர்களையும், சாதுக்களையும் அழைத்து, "துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க, அதர்மத்தை அழித்து தர்மத்தை காத்து, அநீதியை அழித்து நீதியை நிலைநாட்ட நான் எடுத்த அவதாரக் காரியம் முடிந்தது. இனி முனிவர்களும் சான்றோர்களும் குருபரம்பரையினர்களும் தோன்றி நம் திருவருளைப் பெற்று மக்கள் கலியின் பிடியிலிருந்து நீங்கி சமுதாயம் விடுதலைப் பெற்று இன்புற்று வாழ வழிக்காட்டுவார்கள் என்ற அருளிச் செய்தார்.அதற்கு ஏற்பவே ஆழ்வார்கள் தோன்றி பக்தியில் ஆழ்ந்து பரந்தாமனின் கல்யாண குணங்களையும் அவன் திருநாமங்களையும் பாசுரங்களாக பாடி உலகம் உய்ய செய்தனர். அவர்களில் ஆண்டாள் அருள் செய்த அமுதமொழிகளை நாம் பாடியும், கேட்டும் மகிழலாம். அதற்காகவே ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. அந்த நாட்களில் அறிஞர்களும், பாகவதர்களும் ஆண்டாளின் அமுத மொழிகளை பாடியும், கேட்டும், மகிழும் வாய்ப்பாக ஆடிப்பூரத்திருவிழா அமைந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமை: அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான். மட்டுமின்றி இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள். இவ்வூரை, "கோதை பிறந்த ஊர், "கோவிந்தன் வாழும் ஊர் என்றும் சிறப்பித்து சொல்வர். ஆகவே, 108 திவ்யதேசங்களில் இல்லாத பெருமை இத்தலத்திற்கு கிடைத்துள்ளது.
ஆண்டாளுக்காக தனி விழாக்கள்: கோயில் மூலஸ்தானத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் கருட வாகனத்தில் எழுந்தரு ளியுள்ளனர். இது பிரணவத்தின் பிரதி பிம்பமாக அகர, உகர, மகார தத்துவ விளக்கத்தை காட் டுவதாகும். கர்ப்ப கிரகத்தை விட சிறிது தூரம் எழுந்தருளி யுள்ளனர். இதன் ஐதீகம் ஸ்ரீராமானுஜர், ஆண்டாளை சேவிக்க வந்தார். அவரை ஆண்டாள் வரவேற்க வந்ததை குறிக்கும் வகையில் இது உள்ளது. ஸ்ரீரங்க மன் னாரின் பிறந்த நட்சத்திரமான சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தன்று காலையில் ஸ்ரீலட் சுமி நாராயணன் சன்னதிக் கருக்கே உள்ள மண்டபத்தில் ஸ்ரீஆண்டாள் எழுந் தருளி பக்தர் களுக்கு அருள் பாலிப்பார். ஸ்ரீ ரெங்க மன்னார் நீங்கலாக ஆண் டாளுக்கு மட்டும் தனித்து சில விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.
பச்சைப் பரத்தல்: வில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை, "பச்சைப்பரத்தல் என்பர். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். திருமணம் முடிக்கும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள். அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.
உன்னதமான பசியாற்றல்: அன்பு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதை அதிகமாக வெளிப்படுத்துவதும், புரிந்து கொள்வதும் மனிதர்களால் மட்டுமே முடியும். இப்படிப்பட்ட அன்பும், பரிவும் பல வழிகளில் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இதில் சரீர, ஒத்தாசை, தன, தான்ய உபகாரம் போன்றவை அடக்கம். இவற்றினால் மக்களுக்கு தற்காலிக சந்தோஷம், திருப்தி கிடைக்கும். நாம் செய்யும் பொருளுதவியால் அதை பெறுபவர்கள், வாழ்த்தும் வாழ்த்தானது முழுமனதுடன் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதே சமயம் ஒருவருக்கு வயிறார உணவு அளித்தால் அதன் பின் அவர்கள் வாழ்த்தும் வாழ்த்தை என்னவென்று சொல்வது. "வயிறார வாழ்த்தினார் என்பதை சற்று அலசிப் பார்க்கும் போது முழுவதுமாக நிறைவு பெற்ற வயிற்றில் வேறு எதுவும் செல்லாது. எனவே மனதும் முழு திருப்தி அடைகிறது. எனவே பசியாற்றுதல் என்பது ஒரு உன்னதமான காரியமாகும்.
3 வாசலுடன் பெருமாள்: இத்தலத்திலுள்ள மூலவர் வடபத்ரசாயி பெருமாளை தரிசனம் செய்ய பிரதான வாசல்கள் தவிர மேலும் இரண்டு வாசல்கள் இருக்கிறது. சுவாமியின் திருமுகம், திருப்பாதம் தரிசிக்க கருவறையில் இரண்டு பகுதிகளில் இரண்டு வாசல்கள் உள்ளது. ஆனால், சுவாமியை பிரதான வாசலில் இருந்தே முழுமையாக தரிசிக்கலாம் என்பதால், இவ்வாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை.
உயிர் பெற்ற தேர் சிற்பங்கள்: ஆண்டவனையே தன் பால் காதல் கொள்ள வைத்து ,தன்னை ஆட் கொள்ள மண்ணுக்கு வரவழைத்த அற்புத பெண்ணான ஆண்டாள் ஆடி மாதத்தில் அவதரித்தாள். ஸ்ரீவி.,யில் 9 பெரிய கரங்கள் தேரின் ஓட்டத்திற்கு உறுதுணை யாக உள்ளன. இவற்றை எந்த வரிசையில் இருந்து பார்த்தாலும் 9 என்ற எண் வரும். இதேபோல் தேர் இழுக்க மாட்டப்படும் வடமும் ஒன்பது. ராமாயண மகாபாரத கதைகளோடு திருவிளையாடல் புராணக் காட்சிகளும் தேரில் இடம் பெற்றுள் ளன. வைணவ, சைவ ஒற்றுமைக்கு இந்த தேர் எடுத்துக்காட்டாகும். மகா விஷ்ணு தனக்குரிய பலவித மான வாகனங்களில் வருவது போலவும், மதுரை மீனாட் சியம்மனும், சொக்கரும், தங்களுடைய வாகனங்களில் வரு வது போலவும் காட்சிகள் சிற்பி யின் கைத்திறனால் உயிர் பெற்று காட்சியளிக்கின்றன.
தவக்கோல வடிவில் அர்ச்சுனன்: ஆண்டாள் கோயிலின் திருக் கல்யாண மண்டபத்தில்ஏராளமான தொன்மையான ராமாயண ஓவியங்களை காணலாம். லட்சுமணன், ராமன், வீணை ஏந்திய கலைமகள், அகோர வீரபத்திரர், தி, வேணுகோபாலன், விஸ்வகர்மா, நடனமாது, சமுத்திர குமாரன் மகன் ஜலந்தரன், மோகினி சிலைகள் உண்டு. கண்ணாடி மாளிகை எதிரே உள்ள தூண்களில் அன் னத்தின் மீது ரதி, நீர்த்துவ முக வீரபத்திரர், கிருஷ்ணனின் தேரோட்டி, நாக பாணத்தை கையேலேந்திய கர்ணன், மன்மதன், ஊர்த்துவ வீரபத்திரர், தாரை தப்பட்டையுடன் குகன், தவக்கோல வடிவில் அர்சுனன் சிலைகளும் உள்ளன.
ஆண்டாள் அருள் பெறுவோம்: கண்ணனை நினைத்து மார்கழி மாதம் ஆண்டாள், 30 நாட்கள், 30 திருப்பாவை பாடல்களை பாடினாள். பின்பு இறைவனை நினைத்து நாச்சியார் திருமொழி என்ற பாசுரங்களையும் பாடினாள். ஆண்டாள் பிறந்த ஆடி பூரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை புரட்டாசி மாதம் ஐந்தாம் திருவிழா கருடசேவையன்று திருப்பதி எழுமலையான் அணிந்து கொள்கிறார். சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமியன்று அழகர் மதுரையில் ஆற்றில் இறங்கும் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குகிறார். தெய்வீக மணம் கமழும் ஸ்ரீவி., ஸ்ரீஆண்டாள் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டுஆண்டாள் அருள் பெற அழைக்கின்றோம்.
விரும்பியவர் கணவராக பாவை நோன்பு: பெண்கள் விரும்பிய மாணாளனை அடைய பாவை நோன்பு இருக்க வேண்டும். பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் ஆண்டாள், பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பினாள். அதற்காக கண்ணனை மண முடிக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த பெருமாள், பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொண்டார். பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது பெரியாழ்வார் தன் வீட்டிற்க செல்லும் போது அவரது வம்சாவழியினர் சேர்ந்து இரண்டு கலசத்தில் தீர்த்தம் எடுத்து கொண்டு ரங்க மன்னாருக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாக சொல்லி கன்னிகா தானம் செய்து கொடுக்கிறார். பின் ரெங்க மன்னார் ஆண்டாளக்கு மாலையிட்டு தன் மனைவியாக்கி கொள்கிறார். ஆகவே பாவையர் தாங்கள் விரும்பிய கணவரை கைபிடிக்க பாவை நோன்பு இருத்தல் அவசியமாகும்.
திருப்பாவை விமானத்தின் சிறப்பு : கண் கவரும் விமான சிற்பங்கள்: மார்கழி மாதம் நோன்பிருந்த ஆண்டாள் திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினார். மார்கழி மாத 30 நாளுக்குமான 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். இதனை குறிக்கும் வகையில் ஆண்டாள் கோயில் விமானத்தின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. படுக்கையில் தூங்கி கொண்டிருக்கும் தோழியர்களை ஆண்டாள் எழுப்புவது, அவர்களை
அழைப்பது என பல சிற்பங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. திருப்பாவை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதால் இதனை "திருப்பாவை விமானம் என்றே பெயர் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசிக்க வருபவர்கள் இம் விமானத்தை தரிசித்தால் திருப்பாவை பாடிய அருளை பெறுவர்.
ஏலே ஆண்டாளு: திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை "ஏலே!. ஸ்ரீவி., திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக "ஏலே என்ற வார்த்தை ஸ்ரீவி.,யிலும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை "எல்லே என்று இருந்ததாம். இவ்வார்த்தையைக் குறிப்பிட்டு திருப்பாவையில் "எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள். எல்லே என்ற செய்யுள் வார்த்தையே திரிந்து "ஏலே என ஆனது. இப்பகுதியில் குழந்தைகளை ஆணாயினும், பெண்ணாயினும் "ஏலே என செல்லமாக அழைப்பர். பெரியவர்களிடையே சண்டை வந்துவிட்டால், வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில், "ஏலே! உன்னை கவனிச்சுகிறேமுலே என்று சொல்வது நெல்லை மக்களின் வழக்கம்.
கோதை கண்ட தமிழ்ப்பாதை: அரங்கனை ஆட்கொண்டதால் கோதை, "ஆண்டாள் என்ற திருநாமத்துடன் சூடிக் கொடுத்த சுடர் கொடியானாள். பூமாலை சூடிக் கொடுத்த ஆண்டாள் பாமாலை சூட்டவும் தவறவில்லை. வடமொழிச் சொல்லை கலவாமல் தூய தமிழில் திருப்பாவை, திருமொழி பாடல்களை தமிழுக்கு இலக்கணமாகத் தந்தருளிய ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ளார் என்பது நாம் செய்த பாக்கியமே.
திருப்பாவை பாசுரங்கள் அத்தனையும் தூய்மையான, ஆழமான பக்தி நிறைந்தவை. நாச்சியார் திருமொழியோ கவிதானுபவமும், கற்பனை வளமும் நிறைந்து காணப்படுகிறது. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களுக்கென்று ஒரு பக்தி நோன்பு இருக்குமானால் அது ஆண்டாள் தொடுத்த திருப்பாவை ஒன்று தான். தமிழ் பேசத் தெரியாத வடமொழி மாநிலங்களிலும், நேபாளம், கர்நாடகா, ஆந்திர மாநில வைணவ கோயில்களில், வழிபாட்டின் போது தமிழ் உச்சரிப்பு மாறாமல் இந்த திருப்பாவை சொல்லப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்தியவர் "ஸ்ரீ ராமானுஜர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று தேர்த்திருநாள். பார் போற்றும் பாவை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ ரெங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருளி ஸ்ரீவி., ரத வீதிகளில் பவனி வரும் பொன்னாள். இந்நன்னாளில் நாம் ஆண்டாளை வணங்கி அவர் அருள் கிடைக்க பிரார்த்திப்பதோடு தினமும் திருப்பாவை பாடல்களில் ஒன்றையாவது பாடி, மகிழ கேட்டுக் கொள்கிறேன். - எஸ்.ராஜேஸ்கனி,வி.ஏ. டிரேடர்ஸ், ஸ்ரீவி.,
ஆண்டாளுக்கு கிளி ஏன்?
கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது. ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப்பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு. புத்திசாலியான பெண் குழந்தை வேண்டுமா? ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த பெரியாழ்வார், லட்சுமி நாராயணரை தன் குலதெய்வமாக வழிபட்டார். இவர் வழிபட்ட நாராயணர், ஆண்டாள் கோயில் முதல் பிரகாரத்தில் வடக்கு நோக்கியிருக்கிறார். தன் இடது மடியில் லட்சுமியை அமர வைத்தபடி இருக்கும் இவர், சுதை சிற்பமாக இருக்கிறார். எனவே, இவருக்கு அபிஷேகம் கிடையாது. பல வர்ணங்களுடன் இருப்பதால் இவரை, "வர்ணகலாபேரர் என அழைக்கின்றனர். இவரது சந்நிதி, மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான அம்சம். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஆண்டாள் போலவே பக்தியும் அறிவார்ந்த திறனும் கொண்ட பெண் குழந்தைகள் பிறக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. லட்சுமிநாராயணர் உற்சவர், ஆண்டாள் கோயில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவரை சாதாரண நாட்களில் தரிசிக்க முடியாது.
பெருமாள் அருகில் கருடாழ்வார்: பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார். ஆண்டாள் திருமணத்தின்போது, கருடாழ்வார் சுவாமியை ஸ்ரீரங்கத்திலிருந்து அழைத்து வந்தார். இதனாலும், மாப்பிள்ளை தோழனாகவும், எப்போதும் பெருமாள், தாயாரை வணங்க விருப்பப்பட்டதாலும் அருகில் இருப்பதாகவும், அவருக்கு மரியாதை செய்யும்விதமாக இவ்வாறு நிற்பதாகவும் சொல்வர்.
கிளி செய்யும் முறை: இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.
கீர்த்தி தரும் ஆண்டாள்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, இவளிடம் வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.
வளையல், மஞ்சள்கயிறு பிரசாதம்: திருமணமாகாத பெண்கள் இங்கு கண்ணாடி கிணறை சுற்றி வந்து வேண்டிக்கொள்கிறார்கள். துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, அருகிலிருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வந்து கிணற்றினுள்ளே பார்த்துவிட்டு பின் மீண்டும் ஆண்டாளிடம் வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுபவர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
மாலையில் சேர்க்கப்படும் பூக்கள்: ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது. இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர்மாலை கொடுத்தனுப்புகின்றனர்.
சூடிக் கொடுத்த நாச்சியார்: ஆடி மாதம் ஸ்ரீவி., நகரம் தனி பெருமையை சூடிக் கொள்ளும். ஆண்டாள், ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வார், நந்தவனத்தில் துளசி மாடத்தில் ஆண்டாளை குழந்தையாக எடுத்து வளர்த்து வந்தார். மங்கையான ஆண்டாள், கண்ணன் மீது பற்றுக் கொண்டு, அவர் மீது காதல் கொண்டு, அவனையே மணவாளனாக நினைத்தாள். இறைவனுக்கு அணிவிக்க பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையே ஆண்டாள் சூடி, கிணற்றில் தன் அழகை பார்த்தாள். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே இறைவனும் அணிந்து கொண்டார். சூடிக் கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.
அழகு பார்த்த ஆண்டாள்: திருமகளாய் சூடிக்கொடுத்த சுடர் கொடியான ஸ்ரீ ஆண்டாள் அவதாரம் செய்த புண்ணிய பூமியாக விளங்குவது ஸ்ரீவில்லிபுத்தூர்.பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு துளசிச் செடியின் அடியில் கலிபிறந்து 98 நிகழ்ந்த நள வருடத்தில் ஆடிமாதம் 8ம் தேதி செவ்வாய்க் கிழமை கூடிய பூரநட்சத்திரத்தில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்தாள். கோதை தம் தந்தையாகிய பெரியாழ்வார் வடபெருங்கோவிலுடையானுக்குச் சாற்றுவதற்காக தொடுத்து வைத்திருந்த பூமாலைகளை எடுத்து அணிந்து கொண்டு, தாம் கண்ணபிரானுக்கு ஏற்ற மணப் பெண் தானா? என்று அழகு பார்க்க, இதனை அறிந்த பெரியாழ்வார் மிகவும் மனம் வருந்தியவராய் அம்மாலைகளை எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் இருந்தார்.அன்று ஆழ்வாரின் கனவில் எம்பெருமான் தோன்றி தமக்கு கோதை சூடிக்களைந்த மாலையே சிறப்பு என்று கூற அன்று முதல் கோதை "ஆண்டாள் என்றும் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் அழைக்கப்பட்டார். இன்று ஆண்டாள் - ரெங்கமன்னார் தேரில் அமர்ந்து வீதி உலா வருகின்றனர்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.






Continue reading >>

சனி, 21 ஜூலை, 2012

சீதை தீக்குளித்தது ஏன்? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை பெண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனே இப்படி சந்தேகப்படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.
சீதை கடத்தப்பட்ட ஊர்
ராமனும் சீதையும் வனவாசம் செய்தபோது ராவணன் சீதையை தூக்கி சென்றான். பஞ்சவடி என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பஞ்சவடி தற்போதைய நாசிக் என்ற ஊரின் ஒரு பகுதியாகும். மும்பையிலிருந்து 117 மைல் தூரத்தில் நாசிக் அமைந்துள்ளது. இங்கு கோதாவரி ஆறு பாய்கிறது. சூர்ப்பனகை இங்கு வந்துதான் சீதையை பார்த்து தனது அண்ணனிடம் தகவல் சொன்னாள். அப்போது லட்சுமணன் அவளது மூக்கை அறுத்தான். மூக்கு அறுபட்ட இந்த இடத்திற்கு நாசிகை என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே காலப்போக்கில் நாசிக் என்று ஆயிற்று.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

செவ்வாய், 17 ஜூலை, 2012

கோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது. காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை. திரிகரணசுத்தி என்றால் என்ன? மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது. இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள்.
 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
 
Continue reading >>

நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறுமா? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 
 
இருளை விலக்குவது விளக்கு. அருளை வழங்குவது விளக்கு. ஜோதியை வழிபட்டால் ஒளி மயமான வாழ்க்கை உருவாகும் என்பதால் ஜோதியோடு லெட்சுமியை ஒப்பிட்டு ஜோதிலெட்சுமி என்று சொல்வார்கள். ஆதிலெட்சுமியும், ஜோதிலெட்சுமியும் உங்களுக்கு அருள் கொடுத்தால் பாதியில் நின்ற பணிகள் கூட பரபரப்பாக முடிவடையும். பணத்தேவைகளுள் பூர்த்தியாகும். மின் விளக்கிற்கும் நெய் விளக்கிற்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஒரு மின் விளக்கை மற்றொரு மின்விளக்கோடு ஒட்டி வைத்தால் பற்றிக் கொள்ளாது. ஆனால் அதே சமயம் ஒரு எரியும் நெய் விளக்கை மற்றொரு நெய் விளக்கோடு ஒட்டி வைத்தால், அதுவும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கும் எனவே நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

செவ்வாய், 10 ஜூலை, 2012

இரண்டாவது முறை திருமணம் செய்து கொள்ளும் கிரக அமைப்புகள்? ஜோதிடர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் ராகு பதினொன்றாம் பாவத்தில் இருந்து லக்னத்திற்கு  ராசிக்கு சுக்கிரனுக்கு இம்மூன்றிற்கும் செவ்வாய் தோஷம் ஏற்பட்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் இரண்டாம் முறை திருமணம் செய்து கொள்ளும் நிலையை தரும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
     
Continue reading >>

ஞாயிறு, 8 ஜூலை, 2012

இரண்டாம் தாரமாக மனைவியாக போவதற்கு கிரக நிலைகள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதா? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

லக்னம், ராசி , செவ்வாய்  இவர்களுக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி உடன்  ராகு கேது கூடினால் அந்த பெண்ணுக்கு இரண்டாம் தரமாகவே திருமணம் நடைபெறும் என்பது நாடியில் சொல்லப்பட்ட விதியாகும்.
அதே போல்  நான்காம் வீடு என்பது சக்களத்தியை குறிக்கும்  பாவமாகும். அதில் பாவிகள் இருந்தாலும் பார்த்தாலும் அல்லது நான்காம் வீட்டுக்கு அதிபதி பாதிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டாம் தாரமாகவே திருமணம் அமையும்..  
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

கலைத்துறையில் சாதிக்க ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் இருக்கிறதா? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு  சந்தனக்காப்பிட்டு ரோஜாமாலை சூட்டி சர்க்கரைப்பொங்கல், சேமியா பாயசம், மாம்பழம் படைத்து வழிபட கலைத்துறையில் சாதிக்கும் யோகம் உண்டாகும். சனிக்கிழமை ராகுகாலத்தில் (காலை9-10.30)பைரவருக்கு மல்லிகை மாலை அணிவித்து, எள் சாதம், திராட்சை, பால்பாயசம் படைத்து வழிபட்டால் விஷபயம் நீங்கும். செவ்வாய்க்கிழமை பைரவருக்கு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சை மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு, மாதுளம்பழம் படையலிட்டு வழிபட எதிரிகளால் உண்டாகும் துன்பம் நீங்கும். எதிர்ப்புகள் அகன்று வெற்றி வந்து சேரும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் பண்பாடு கடவுளிடம் இல்லாமல் இருப்பது ஏன்? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
  
ஒரு சில தெய்வங்கள் இரு சக்திகளோடு இருப்பது தத்துவங்களின் அடிப்படையில் தான். இதனை இரண்டு பெண்டாட்டிக்காரன் கதையாக எடுத்துக் கொள்வது தவறு. மனிதவாழ்வில் கூறப்படும் மனைவி வேறு. தெய்வநிலையில் சக்தி என்பது வேறு. காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. நாம் வாழ்வதற்கு பூமியும், செல்வமும் தேவைப்படுகின்றன. இதனை இரு சக்திகளாக அதாவது தனது திறன்களாக விஷ்ணு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார். ஒன்று ஸ்ரீதேவியாகிய செல்வம். மற்றொன்று பூதேவியாகிய பூமி. ஒரு பொருளை நாம் விரும்புகிறோம். நமது விருப்பம் சரியா தவறா என்று அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து பிறகு அதை அடைய முயல்கிறோம். விருப்பம், அறிவு, செயல் என மூன்றும் சேர்ந்தால் தான் ஒருவிஷயம் நிறைவுபெறும். இம்மூன்றும் முருகப்பெருமான் வடிவம். விருப்பம் என்னும் இச்சாசக்தி வள்ளி, அறிவு என்னும் ஞானசக்தி முருகன், செயல் என்னும் கிரியாசக்தி தெய்வானை. எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தெய்வங்களுக்குரிய சக்தியை மனைவியாகச் சித்தரித்துள்ளனர். சக்தியைப் பெண்ணாக்கி வழிபடுவது நம் மரபு.       

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

ராவணனுக்கு பத்துதலை இருந்தது ஏன்? ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ராட்சஷர்களில் ராவணன் பத்து தலைகளுடன் விளங்கினான். சிவன்,  விநாயகர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கூட ஐந்து தலை இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இவர்களை பஞ்சமுக என்ற அடைமொழி சேர்த்து அழைப்பது வழக்கம்.

ஆனால், தனது பக்தனான ராவணனுக்கு சிவன் பத்து தலைகளை அளித்தார். காரணம், அவன் யாகம் செய்யும் போது, சிவன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக தனது தலையையே அறுத்து யாக குண்டத்தில் போடுவான். இவனது பக்தியை மெச்சிய சிவன், அறுந்து விழுந்த தலை மீண்டும் முளைக்கும் வகையில் பத்து தலை வரமளித்தார். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

Continue reading >>

சமீபத்திய கருத்துகள்