ஓம் சிவ சக்தி
மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைக்கும் சிம்ம ராசி அன்பர்களே , , தன்னை
நம்பி வந்தவர்களை ஆதரிப்பீர்கள். இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து
உங்களுக்கு புது முயற்சிகளில் வெற்றியையும், வசதியையும் பெற்று தந்த
சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை சுக வீடான 4-ம்
வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையே கொஞ்சம் சவாலாக தான்
தெரியும். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டதிபதியாக சனி வருவதால்
உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு
இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் உங்களுடைய அணுகுமுறையை
மாற்றுவது நல்லது.
உங்களை சுற்றி உள்ளவர்களோடு உங்களை ஒப்பீட்டுக் கொண்டிருக்க வேண்டாம். ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூட கொஞ்சம் செலவு செய்து, அலைந்து போராடித் தான் முடிக்க வேண்டி வரும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வீடு, மனை, சொத்து வாங்குவதாக இருந்தால் பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரங்களையெல்லாம் சரி பார்த்து வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.
அவ்வபொழுது சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். தாயாருக்கு இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். மின்சாரம், கத்திரி கோள், நக வெட்டி போன்றவற்றை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.
உங்களை சுற்றி உள்ளவர்களோடு உங்களை ஒப்பீட்டுக் கொண்டிருக்க வேண்டாம். ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூட கொஞ்சம் செலவு செய்து, அலைந்து போராடித் தான் முடிக்க வேண்டி வரும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வீடு, மனை, சொத்து வாங்குவதாக இருந்தால் பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரங்களையெல்லாம் சரி பார்த்து வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.
அவ்வபொழுது சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். தாயாருக்கு இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். மின்சாரம், கத்திரி கோள், நக வெட்டி போன்றவற்றை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.
சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை
மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதி குருவின்
சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 4-ம் வீட்டில் சனி செல்வதால்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்க
விஷயம் சற்று தாமதமாகி முடியும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக
நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.
வீட்டில் குடிநீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது வந்துப் போகும்.
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீடான துலாம் ராசி
விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில்
மனோபலம் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப்
பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள்
உண்டு. வாகனம், சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். குழந்தை பாக்யம்
கிடைக்கும். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள்.
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே
சனி வக்கரித்து செல்வதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்,
நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். யாரும் உங்களைப்
புரிந்துக் கொள்ளவில்லையென்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வேற்றுமொழிப்
பேசுபவர்களால் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டாகும். பூர்வீக சொத்து பங்கை
கேட்டு வாங்குவீர்கள்.
உங்களின் ராசிப்படி உங்கள் சஷ்டம-சப்தமாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம்
நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல்
15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள்,
வீண் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இரத்த சோகை, தலைச்சுற்றல், பைல்ஸ், மூச்சுப் பிடிப்பு வரக்கூடும். மனைவி
மற்றும் மனைவிவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். பழைய கடனை
நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை
உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால்
புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். பொது
விழாக்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். மனைவிவழி
உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் தனாதிபதியும்-லாபாதிபதியான
புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் உங்களின் புகழ்,
கௌரவம் ஒருபடி உயரும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த-பந்தங்கள் தேடி
வருவார்கள். பணம் வரும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று
காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். வேலைக் கிடைக்கும். கைமாற்றாக
வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். புது பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி
வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை நீங்கும். சுபச்
செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் உண்டு. பூர்வீக
சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று
நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கிரகங்களில் சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு,
செரிமானக் கோளாறு, வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். சுத்திகரிக்கப்படாத
தண்ணீரை குடிக்க வேண்டாம். கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில்
கருவளையம் வரக்கூடும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சனிபகவான் 6-ம்
வீட்டைப் பார்ப்பதால் கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மறைமுக
எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன்
இணக்கமான சூழல் உருவாகும். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால்
உத்தியோகத்தில் வேலைபளு, விரும்பத்தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துச்
செல்லும்.
நீங்கள் செய்யும் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்கு அதிகம் உழைக்க வேண்டி வரும்.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். மற்றவர்களை நம்பி
முக்கிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பங்குதாரர்கள் உங்கள்
கருத்துக்களை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். ரியல்
எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம், பெட்ரோ-கெமிக்கல் வகைகளால்
லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வேலைச்சுமை இருக்கத்தான் செய்யும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக்
கொள்வார்கள். சக ஊழியர்களில் ஒருசாரார் உங்களுக்கு ஆதரவாகவும், ஒருசாரார்
உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். திடீர் இடமாற்றங்கள் வந்துப்
போகும். உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள்.
இளம் பெண்கள் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். அன்பாக
பேசிபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். தாயாரை
தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். திருமணம் நிச்சயமாகும். மாணவ-மாணவிகளே!
கடைசி நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.
விளையாடும் போதும் சின்ன சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். இந்த
சனி மாற்றம் வேலைச்சுமையையும், செலவுகளையும் அவ்வப்போது தந்து
அலைக்கழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
திருப்பனந்தாள் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணஜடேசுவரரை உத்திராடம்
நட்சத்திரம் நடைபெறும் நாள் அல்லது அமாவாசை திதியில் தீபமேற்றி
வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக