Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 3 நவம்பர், 2012

ஜோதிட ரகசியம் என்று ஒன்று இருக்கிறாதா? ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன் BSC பதில்கள்

வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிரக நிலைக்கும் , ஒவ்வொரு விதமான பலன்கள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு சில விஷயங்கள் இலை மறைவு விஷயங்களாக சொல்லப்பட்டுள்ளன . இந்த விஷயங்களை ஜோதிடம் பார்க்கும் அனைத்து ஜோதிடர்களும் அறிந்து பலன் சொல்வது என்பது கடினம் . ஆழ்ந்த ஜோதிட ஞானம் ஜோதிடத்தில் ஆராய்ச்சி திறன் கொண்ட ஒரு சில ஜோதிடர்களிடமிருந்து மட்டுமே அறிய முடியாத ஒரு சில ஜோதிட ரகசியங்களை அறிந்து தெரிந்து கொள்ளலாம் . அப்படி தெரிந்து கொள்ளகூடிய அரியதொரு  விஷயம்தான்  சாமந்த கேஹம் .
ஒருவது ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் இடத்தை கொண்டு  சுக சௌகரியங்கள்  வாகன சுகங்கள் குடும்ப சுகங்கள் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளலாம். அதே போல் மனிதன் சுக போகமாக வாழ்வதற்கும்  வாழ்க்கையின் சுகங்கள் எல்லாம் அனுபவித்து வழி தோன்றல்களை உருவாக்கி வளர்த்து பாதுகாப்பதற்கு வீடு அவசியமாகிறது . அதை விட அந்த வீடு கட்டுவதற்குரிய வீட்டுமனை , அவனால் அமைக்கவிருக்கும் வீட்டின் கட்டட அமைப்புக்கும் , அவனது சொந்த தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில் அமைய வேண்டிருக்கிறது.
எனவே ஒருவரின்  ஜாதகத்தின் படி அந்த ஜாதகருக்கு அமையும் வீடு, வீட்டு மனை ஆகியவற்றை அறிவதற்கு சாமந்த கேஹம்  என்னும் ஒருவகை கிரக அமைப்பை கொண்டுதான் நிச்சயிக்க முடியும் என்று ஜோதிட நூல்களை எழுதியுள்ள மாமுனிவர்கள் எழுதி உள்ளனர். இவற்றை எல்லாம் சாதாரண ஜோதிடர்களிடமிருந்து தெரிந்து கொள்ள இயலாது . ஜோதிட ஆய்வாளர்கள் வழங்கும் அபூர்வவமானவற்றுள் இதுவும் ஒன்றாகும்.
ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு நான்காம் இடத்திற்கு சாமந்த  கேஹம் என்பது 9, 11 இடங்களாகும் .
அதாவது லக்னத்தின் கிரக நிலைகளை  கொண்டு எத்தகைய பலன்கள் சொல்ல பட்டனவோ அவற்றையே அவற்றையே இங்கும் கண்டறிந்து பலன்கள் சொல்லவேண்டும் . இந்த சாமந்த கேஹத்தில் குரு பகவான் இருந்தால் சுகம் நிறைந்ததாயும் சிறந்ததாயும் ராசியான விசாலமான வீட்டை அந்த ஜாதகம் பெற்றிருப்பான் . 
இந்த சாமந்த கேஹத்தில்  சுக்கிரனோ புதனோ பூரண சந்திரனோ இருந்தால் அந்த ஜாதகர் செல்வ வளம் உடையவராயும் சௌக்கிய சுக போகங்களை அடைந்து அனுபவிப்பவராயும் நன்றாக படித்தவராயும் இருப்பார் 
தேய்பிறை சந்திரன் பாவ கிரகத்துடன் கூடி இந்த சாமந்த கேஹத்தில்  இருந்தால் அந்த ஜாதகர் தரித்திரம் உடையவராக   இருப்பார். 
மேலும் இந்த ஸ்தானத்தில் குரு பகவான் இருந்தால் அந்த ஜாதகனுக்கு    கிணறு குளம் தோப்புகள் பூந்தோட்டங்கள் முதலியவற்றுடன்  கூடிய விசாலமான வீடு  அமைந்திருக்கும் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்