வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
கேரளத்தில் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். நீன்ற காலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு புராண ரீதியாகவும் சரித்திர அடிப்படையிலும் சான்றுகள் உள்ளன.
கேரள மக்களை நன்கு ஆண்டுவந்த மகாபலி சக்கரவர்த்தி இந்திர பதவிக்கு போட்டியிட்டதால் மகா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அவனிடம் மூன்றடி நிலம் தானமாக கேட்டார். விண்ணையும் மண்ணையும் இரண்டு இரண்டு அடிகளால் அளந்தார். வந்திருப்பது மகா விஷ்ணு என்பதை அறிந்த மகாபலி சக்கரவர்த்தி மூன்றாவது திருவடிக்கு தன தலையையே அளித்தார். அதனால் மகாபலியை மேலோகத்துக்கு அனுப்பி அங்கேயே ஆண்டு வரும்படி செய்தார் மஹா விஷ்ணு என்பது ஒரு புராண வரலாறு. அப்பொழுது மாஹபலி ஆண்டுக்கு ஒரு முறை பூலேகத்துக்கு வந்து கேரளத்தில் தனது குடி மக்களை பார்த்து விட்டு திரும்ப வரம் கேட்டான். அதை அளித்து அருளினார் மகா விஷ்ணு. மேலும் மகா விஷ்ணு வந்து அருளிய கேரளம் தேவ பூமியாக கருதப்படுகிறது. அதை நன்கு ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியை மக்கள் இவ்வித ஆண்டுக்கு ஒரு முறை வரவேற்று ஓணம் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் கொண்டாடபடுகிறது.
ஜோதிட ஆலோசனைகளுக்கு எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் +91 8122733328 . இந்தியா. தமிழ் நாடு
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
ஜோதிடர் ஆர். ராவணன் BSC
தொலைபேசி எண் +91 8122733328
இந்தியா. தமிழ் நாடு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக