வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
ஒரு மனிதனின் ஆயுள் முடியும் தருவாயில் அவனுடைய மரணம் பல வகைகளில் நிகழ்கின்றது. அவற்றுள் ஒன்று தண்ணீரால் மரணம் ஏற்படுவது. அல்லது கண்டம் ஏற்படுவது. தண்ணீரால் மரணம் என்று சொல்லும்பொழுது தண்ணீரில் மூழ்கி இறப்பது.
அல்லது திரவ சம்பந்தப்பட்ட பொருளாலோ , அல்லது நபராலோ மரணம் ஏற்படுவது என்று சொல்லலாம். ஆக மொத்தத்தில் அவருடைய மரணத்துக்கும் நீருக்கும் (திரவ சம்பந்தப்பட்ட பொருளுக்கும் ) ஏதாவது நெருங்கிய தொடர்பு இருக்கும்.
அப்படி பார்க்கும்பொழுது தண்ணீரை ஆங்கிலத்தில் WATER என்று அழைப்பர். நியூமராலாஜி படி இந்த சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 6 1 4 5 2 = 18 = 9 . என்று வருகிறது.
இந்த ஒன்பது என்ற எண் செவ்வாயின் ஆதிக்க எண்ணாகும். நவ கிரகங்களில் செவ்வாய் என்ற எண் ( எண் 9 ) தண்ணீரின் ஆதிக்கத்திற்கு உரிய எண் ஆகிறது. இந்த 9 என்ற எண் 2 ம் எண்ணிற்கு மட்டும் கடுமையான தீமையான பலன்களை தர கூடியது.
அதாவது 2 11 29 20 ( இரண்டு எண்களையும் கூட்டும்பொழுது 2 வர வேண்டும்.) போன்ற எண்களுக்கும், B K R போன்ற எழுத்திற்கும் தீமையை தரக்கூடியது .அதனால் பெயரில் கூட்டு எண்ணாக இரண்டு வருபவர்களும் பெயரின் ஆரம்ப எழுத்து B K R போன்ற எழுத்தாக வருபவர்களுக்கும் தண்ணீரின் மூலமாகவோ அல்லது தண்ணீரோடு சம்பந்தபட்டவற்றாலோ கண்டங்கள் ஏற்படலாம்.
- அப்படி பார்க்கும்பொழுது கடக ராசிக்கு உரிய எண்களான 28 29 30 31 32 33 34 35 36 போன்ற எண்களை பெயரில் கொண்டவர்களுக்கு கும்ப ராசி ஆயுள் ஸ்தானமாக வருகிறது.இந்த கும்ப ராசிக்கு உரிய சனி பகவானை பனி கோள் (அதாவது நீரோடு தொடர்புடைய கோள்)என்று அழைப்பர்.
- கடக ராசிக்கு ஆயுள் ஸ்தான அதிபதியாக வரும் கும்ப ராசிக்கு உரிய சனி பகவான் கடக ராசியின் அதிபதி சந்திரனுக்கு பகையான கிரகம் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் பலம் இல்லாமல் இருந்து (அதாவது நீச்சம், பகை ,மறைவு ஸ்தானங்களில் இருப்பது பல பாவ கிரகங்களின் பார்வையை பெற்று இருப்பது) 28 29 30 31 32 33 34 35 36 போன்ற எண்களை பெயரில் பெற்றவர்களுக்கு தண்ணீரால் விபத்து (அதாவது மரணம், கண்டம்) ஏற்படலாம். .
- அதே போல் பெயரின் கூட்டு எண்ணாக 19 20 21 22 23 24 25 26 27 ஐ பெற்றவர்கள் மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் ஆதலால் இவர்களுக்கு மகர ராசி எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானமாக வருகிறது. இந்த மகர ராசி என்பது ஒரு நீர் ராசியாகும்.
- ஆதலால் 19 20 21 22 23 24 25 26 27 போன்ற எண்களை பெயரின் கூட்டு எண்களாக பெற்றவர்கள் நீரின் மூலம் கண்டங்களை ஏற்படுத்தக்கூடிய விபத்துகளுக்கு ஆளாகலாம்.
- அடுத்து 37 38 39 40 41 42 43 44 45 இந்த எண்களை பெயரின் கூட்டு எண்களாக பெற்றவர்கள் சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானமாக வருவது மீன ராசியாகும். இந்த மீன ராசி என்பது ஒரு முழுமையான நீர் ராசி என்பதால் இவர்களுக்கு நீராலும் நீரோடு தொடர்புடைய வற்றாலும் ஆயுள் ரீதியாக பதிப்பு ஏற்படலாம்.
- அடுத்து 73 74 75 76 77 78 79 80 81 போன்ற எண்களை பெயரில் பெற்றவர்கள் தனுசி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் காரணம் இந்த எண்கள் அனைத்தும் தனுசு ராசியில் வருவதாகும்.
- இந்த தனுசு ராசிக்கு எட்டாம் இடமான ஆயுள் ஸ்தானமாக கடக ராசி வருகிறது. இந்த கடக ராசி என்பது ஒரு நீர் ராசியாகும். எனவே 73 74 75 76 77 78 79 80 81 எண்ணை பெயரின் கூட்டு எண்ணாக பெற்றவர்களுக்கு தண்ணீரின் மூலமாகவும் தண்ணீரோடு தொடர்புடையவற்றாலும் ஆயுள் ரீதியான பாதிப்பு கண்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலே சொன்ன அனைத்து எண்களையும் பெயரின் கூட்டு எண்ணாக பெற்றவர்களுக்கு தண்ணீரின் மூலமாகவோ அல்லது நீரோடு சம்பந்தப்பட்ட வற்றாலோ ஆயுள் ரீதியான பாதிப்பு ஏற்பட்டாலும் ,
அவர்களின் பிறந்த தேதிக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கும் ஏற்றார் போல் அமைந்து விட்டால் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம். அதாவது தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்பது போல் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
அதே சமயத்தில் மேலே குறிப்பிட்ட எண்கள் அவர்களின் பிறந்த தேதிக்கு ஒத்து வராமலும், இறப்பு சாவு போன்ற ஒலி அலைகளை ஏற்படுத்து D என்ற எழுத்தை பெயரில் பெற்றவர்களும் தண்ணீராலும் தண்ணீரோடு சம்பந்தப்பட்டவற்றாலும் கண்டங்கள் ஏற்படலாம்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக