Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 12 ஜனவரி, 2012

நீண்ட ஆயுள் யாருக்கு அமையும்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும்பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP  AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
ஒருவருடைய ஜாதகத்தில் பலவகையான யோகங்கள் இருந்தாலும் அந்த யோகங்களை அனுபவிப்பதற்கு அவருடைய ஜாதகத்தில் ஆயுள் பலமாக அமைய வேண்டும்.  

ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி பகவான் ஆவார். 

ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்கண்ட அமசங்களை நாம் பார்க்கவேண்டும். 

லக்னத்துக்கு எட்டாம் இடம், 

லக்னத்துக்கு மூன்றாம் இடம்லக்னத்துக்கு பத்தாம் இடம் பத்தாம் 
இடத்தில் நின்ற கோள்கள்,

சூரியன், ஆயுளுக்கு அதிபதியான சனி பகவான்.  இவர்களை கவனிக்க வேண்டும் . 

லக்னாதிபதியும் சூரியனும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகமானால் ஆயுள் தீர்க்கம்.     
லக்னாதிபதுயும் சூரியனும் சமமானால் மத்திமமான ஆயுள். 

இரண்டும்  ஒன்றுக்கு ஒன்று பகையான  கிரகமானால் அற்ப ஆயுள். அற்ப ஆயுள் என்றால் அந்த ஜாதகன் 32  வயது மட்டுமே வாழ்வான். 
     
லக்னாதிபதி  லக்னத்துக்கு எட்டாம் வீட்டுக்கு அதிபதி லக்னத்துக்கு பத்தாம் வீட்டுக்கு அதிபதி வலுப்பெற்று காணப்பட்டால் அதாவது ஒன்று, நான்கு, ஏழு, பத்து, ஐந்து, ஒன்பது, போன்ற இடங்களில் இருந்தும். 

லக்னாதிபதிக்கோ எட்டாம் வீட்டு அதிபதிக்கோ பத்தாம் வீட்டு அதிபதிக்கோ, சுப கிரகங்களின் பார்வை இருந்தால் அந்த ஜாதகனுக்கு பூரண ஆயுள். 

இவர்களில் இருவர் மட்டுமே  வலுப்பெற்றால் அந்த ஜாதகனுக்கு  ஆயுள் வயது 66 .  

ஒருவர் மட்டுமே வலுப்பெற்று காணப்பட்டால் அந்த ஜாதகனுக்கு ஆயுள் வயது 33  .   
குரு சுக்ரன் ராகு, போன்ற கிரகங்கள் லக்னத்திலோ அல்லது நான்கு, ஏழு, பத்து, போன்ற கேந்திர ஸ்தானங்களில் இருந்தாலோ அவனுக்கு தீர்க்க ஆயுள். 
சூரியன் லக்னத்தில் இருப்பது, ஜாதகனுக்கு நீன்ற ஆயுளை தரும். லக்னத்துக்கு எட்டாம் வீட்டுக்கு அதிபதி, அல்லது ராசிக்கு எட்டாம் வீட்டுக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் அந்த ஜாதகனுக்கு தீர்க்க ஆயுள் அமையும்.   
லக்னத்துக்கு எட்டாம் பாவம் லக்னத்துக்கு மூன்றாம் பாவம் இந்த ஸ்தானங்களில் சுப கிரகங்கள் பார்த்தாலும் இந்த இடங்களில் ஆயுளுக்கு அதிபதியான சனி பகவான் இருந்தாலும் அந்த ஜாதகனுக்கு ஆயுள் அதிகமாகும்.  
லகனத்துக்கு பத்தாம் வீடு, பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகம் , சூரியன், இவற்றை கொண்டு ஒருவருடைய ஆயுளை, கணிக்க முடியும்.   
ஒருவருக்கு தீர்க்கமான ஆயுள் அமைய கீழ் கண்ட ஜோதிட பாடல் விளக்குகிறது.   
பத்து, பதினொன்று 
மூன்றும் அன்றும்  
பகருமேறு மோராறில்  
பகலவன் நிற்க  
விதி தீர்க்கம்.   
இதன் விளக்கம். 
லக்னத்துக்கு 10  11  3  6 போன்ற இடங்களில் சூரியன் இருந்தால் அந்த ஜாதகன் நீண்ட ஆயுளை பெற்று வாழ்வதற்கான கிரக அமைப்பாகும்.    
லக்னாதிபதி , எட்டாம் வீட்டுக்கு அதிபதி பத்தாம் வீட்டுக்கு அதிபதி சூரியனுடன் கூடி கேந்திரங்களில் இருந்தால் அவனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்