சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014
ரிஷப ராசி நேயர்களுக்கு,
உங்கள் ராசிக்கு சனிபகவான் 6ல் சஞ்சரிக்கிறார். என்றால் நீங்கள் வெற்றி தேவதையை பரிசாகப் பெற்றவர்கள் எனலாம்.
எதிலும் இரட்டிப்பு பொருள் வரவும், உயர்ந்த நடையும் உண்டாகிவிடும். யாருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பான நற்பலன் உண்டாகிவிடும். அரிதான செயல் வெற்றி அற்புதமாக உண்டாகும். என்றாலும் வியாழனின் சஞ்சாரம் நல்லபடியாய் இல்லை என்பதால் எச்சரிக்கையாக எக்காரியத்திலும்ம் ஈடுபாடு வேண்டும். நண்பர்கள் மற்றும் யாவரிடமும் எச்சரிக்கை வேண்டும்.
உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.இது உங்களுக்கு பொற்காலம் என்றே கூற வேண்டும். கணவன்- மனைவி உறவி அற்புதமாக இருக்கும். உறவினர்களால் நற்பலன் உண்டாகும். பொன்,பொருள் சேர்க்கை உண்டாகும்.
கொடுக்கல், வாங்கலில் அனுகூலமும் எதிர்பார்த்த பொருள் வரவு திடீரென்று கிடைக்கும். நிலபுலங்களால் சிலருக்கு நல்ல லாபம் கிட்டும். சிலருக்கு திடீரென்று வெளியூர், பயணங்களால் நன்மை ஏற்படும்.
சக தோழர்களின் ஒத்துழைப்புக்கள் உண்டாகும். அதிகாரிகளின் அனுகூலம் சாதகத்தைத் தரும்படியாக இருக்கும். சிலருக்கு இடமாற்றம் அமையும். தனியார் துறையில் இருப்போர் சற்று கவனமுடன் இருக்கவும்.
வியாபாரம் எதிர்பார்த்ததை விட நம்மையான பலன் ஏற்படுத்தும். இரும்பு, துணி சம்பந்தப்பட்ட துறையினர், தவிர ஏனைய வியாபாரம் மிக சாதக மான பலன் ஏற்படுத்தும். கடன், வசூல் திருப்திகரமாக இருக்கும்.
* கணவன்-மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும். உறவினர் நண்பர்களால் நற்பலன் உண்டாகும். வெளியூர், பயணங்கள் சிலருக்கு அமையப் பெறும். குடும்பத்தில் ஸ்திர சொத்து சேர்க்கை, ஆடை ஆபரணங்கள் சேரும் யோகம் யாவும் உண்டாகும்.
மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் மிகுந்து காணப்படும். தொழிற்கல்வி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது.அரசு வழியில் உதவி பணம் சிலருக்குத் தடையின்றி கிடைக்கும். பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை செய்வீர்கள்.
* எதிரிகளின் பல குரைந்து உங்கள் பலம் கூடும். இனி எந்தப் புதிய முயற்சியிலும் ஈடுபடலாம்.பரிபூரண வெற்றி உண்டாகும். மற்றவர்கள் மதிக்ககூடிய உன்னத நிலையும் உண்டாகும்.
உங்கள் முயற்சிகள் லாபம் கொடுக்கும். நல்ல அனுகூலத்தைக் கொடுக்கும். மேற்கொண்டு புதிய பராமரிப்பு மற்றும் புதிய யுக்திகளால் வருங்காலத்தை வளப்படுத்திக் கொள்வீர். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
புதிய பட வாய்ப்புகள் தேடி வரும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் பூரிப்பு ஏற்படித்தும். பயணங்களால் நன்மை உண்டாகும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.
நட்சத்திரப் பலன்கள்;
கிருத்திகை: 2,3,4 ம் பாதங்கள்:
உங்கள் ராசிகுரிய யோக பலன்கள் கூடுதலாகும். எடுக்கும் காரியம் வெற்றியைக் கொடுக்கும். பொருள் வரவு திருப்தியாக இருக்கும்.
ரோகிணி: செய்யும் தொழிலில் சிறப்பும்,புதிய முயற்சியில் அனுகூலமும் உண்டாகும். தொழிலில் சிறப்பு ஏற்படும். சிலருக்கு புதிய பொறுப்பு வரும். ஏற்றுக் கொள்ளவும்.
மிருகசீரிஷம்: 1,2, பாதங்கள்:
உங்களுக்கு மாபெரும் மறுமலர்ச்சி உண்டாகும். அசையா சொத்து அமையும். மனைவி வழி வீட்டாரின் உதவி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
தெய்வ வழிபாடு:
அம்மன் வழிபாடு சிறப்பு தரும். சக்தி ஸ்தலங்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்திவர வேண்டும். மதுரை மீனாட்சி காஞ்சி.காமாட்சி, காசி விசாலாட்சி போன்ற முதன்மை ஆதிக்கம் பெற்ற சக்தி ஸ்தலங்களும், திருநெல்வேலி காந்திமதி குற்றாலம், மடவார் குழலி, கன்னியாகுமரி, பகவதி இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திரூத்திர கோசமங்கை மங்கள் நாயகி, திருஆனைக் காவல் அகிலாண்டேஸ்வரி, மைசூர் சாமுண்டேஸ்வரி சிருங்கேரி சாராதாம்பாள், தாய் மூகாம்பிகை போன்ற ஆதி சக்தியை தரிசனம் செய்ய வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக