சகடை யோகம் என்றால் அனைவரும் சகடையா? வண்டிச் சக்கரம் போல் வாழ்க்கை அமைந்து விடும் என்பார்கள் அனைவரும்.
குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும். சகட யோகம் என்றால் வண்டிச் சக்கரம். சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும்.
யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே
செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்
குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துன்பங்கள் ஏற்படும்.
பொன்னுமம் புலிக்காறெட்டாகில்
எந்த நாளாகி லுந்தானிவனுக்கே யோக மில்லை
அகடி மன்னனுக் காறெட்டொடு
விதிகடிலாமதி எய்தியிருந்திடின்
சகடயோகமிதிற் தார்க்கெலாம்
விகட துன்பம் விறையு மரிட்டமே !
சீரே நீ குருவுக்கு வியமாரெட்டில்
செழு மதியுமதிலிருக்க சகட யோகம்
ஆரே நீ அமடு பயம் பொருளும் நஷ்டம்
குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில்
பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார்
பெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்
நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்
குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர். வாழ்நாளில் துன்பத்தை அனுபவிப்பார்கள். லக்கினத்திற்கு 6-8ல் அதிக துன்பம் தரும்.
( சந்திரனுக்கு 12-ல் குரு இருப்பின் அனபா யோகம் . குருவுக்கு 12-ல் சந்திரன் இருந்தால் சுனபா யோகம்)
குரு துர்ஸ்தானம் பெற்றாலும் சந்திரன் பெறக்கூடாது . என்பதை நாம் நன்குணர வேண்டும்.
லக்கினத்திற்கு 7-8-ல் இருந்து. இருந்து.இருவருக்கும் 6-8 ஆக இருந்தால் சகட யோகம் அதிகம் பாதிக்கும்.
"மதியுயார் மறையாதக மதி தனக்கீராரெட்டில்
அதிபெரு குரு வேயெய் தாலவர் சுபர் வீடானாலும்
துதி பெரு பகை நீசத்திற்றோன்றிடவு பயக்கோலின்
விதி பெரு சுபராய்ச் சென்றவிடம் பகையுனுமால் செப்பே
சந்திரன் லக்கினத்திற்கு மறையாமலிருந்து. சந்திரனுக்கு 8-12-ல் குரு இருக்க. சுபர் வீடானாலும், பகை நீசமாக இருந்தாலும் .ஜாதகர் /ஜாதகிக்கு சென்றவிடங்களில் பகை ஏற்படும்.
சகட யோகம் என்றால் கஷ்டம் மட்டுமேதானா என நினைக்க வேண்டாம். உச்சத்திற்கும் போகலாம். ஆனால் சரிவும் நிச்சயம்.
இதற்க்கு உதாரணமாக நடிகர் ராமராஜனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம் .
திரைப்படங்களில் ஒரு கால கட்டங்களில் பெரும்புகழ் பெற்றார். பணம் புகழ் செல்வாக்கு அனைத்தும் இவரை தேடி வந்தது . இவரின் சகடயோக ஜாதக அமைப்பு இவரை சரிவில் தள்ளிவிட்டது .
நடிகர் ராமராஜன் ஜாதகம் :
இவருடைய ஜாதகப்படி தனுசு லக்னம் . லக்கினாதிபதி கடகத்தில் உச்சம் அடைந்துள்ளார் . அதேசமயம் குருவிற்கு 6 ம் இடத்தில் சந்திரன் அதாவது லக்கினத்தில் சந்திரன் . இது சகடை யோகமாகிறது
சகட யோக பங்கம்
"பூரண மதியானாலும் புதன் புகர் கூடினாலும்
காரண எருது கும்பம் கன்னி யாழ் மீனம்
நன்புத் தாரணி சுபாங்கிசத்தில்
சந்திரனிருந்திட்டாலும்
பாரினில் சகட யோகம் பாழ்படும் என்று சொல்வீர்
சகட யோகம் அமைந்தவர்களுக்கு வளர் சந்திரன், புதன், சுக்கிரன் கூடியிருந்தாலும், ரிசபம், கும்பம், கன்னி, மிதுனம், மீனம், கடகத்தில் சுப அம்சத்தில் சந்திரனிருந்தால் சகட யோகம் பங்கமாகும்.
உதாரணம் முந்நாளைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகம் :
திரு. பண்டித ஜவஹர்லால் நேரு. இவரது ஜாதகத்தில் குருவுக்கு எட்டில் சந்திரன்.லக்கின கேந்திரத்தில் ஆட்சியுடன் சந்திரன். ஆறில் குருவும் ஆட்சி பெற்று இருக்கிறார். இதனால் சகட யோகம் பங்கம் ஆகி விட்டது. இதனால் புகழ் பெற்ற பாரதப் பிரதமரானார்.சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்படும்,
ஜவஹர்லால் நேரு ஜாதகம் :
“நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”
பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள் குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள்.சகட யோகம் என்ற ஒரு குறிப்பினை மட்டும் வைத்து இதனை படிக்கும் எவரும் அவரவர் ஜாதகத்தினை எடுத்து ஆய்வு செய்ய வேண்டாம்,
எத்தனையோ குறிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கு மதிப்பு அவ்வளவே என்ற கருத்தை நிரூபிக்கவே மேலே இரு உதாரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328